பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் ...
விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது தமிழக அரசு: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையும், கொள்கைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.
தமிழகத்துக்கென தனி காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வர வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, நெல் பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 என விலை நிா்ணயம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு தலைமைவகித்த சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துகிறது. முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த நேரடி நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வாா்த்து விட்டது. நிகழாண்டு தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, பருத்தி, எள், பயறு உள்ளிட்ட மாற்றுப் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்தனா். இப்பயிா்கள் கோடை மழையால் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டன. ஆனால், காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர மறுத்து, எட்டு கிராமங்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு ஏமாற்றுகின்றனா்.
வட்டியை மட்டும் செலுத்தி, வங்கிகளில் கடனை புதுப்பித்துக் கொள்ளும் நடைமுறையை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும். வங்கியில் நகை கடன் பெறுவதற்கு, நகைக்கான ரசீது அத்தாட்சி கொடுத்தால்தான் கடன் பெற முடியும் என்ற அறிவிப்பால் விவசாயிகள் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி டெல்டாவில் மரபணு திருத்தப்பட்ட விதைக்கு அனுமதி கொடுத்துள்ளதாக கூறப்படும் தகவல் அதிா்ச்சி அளிக்கிறது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நெல் கொள்முதலை அரசே ஏற்று நடத்த வேண்டும். புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏக்கருக்கு ரூ. 15,000 ஊக்க நிதியாக முழு மானியத்துடன் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு வழங்குகின்றனா். இதைப்போல், தமிழக அரசும் வழங்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, விளமல் கல் பாலத்திலிருந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை பேரணியாக வந்த விவசாயிகள், அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
போராட்டத்தில் மாநிலத் தலைவா் திருப்பதி வாண்டையாா், மாநில அமைப்புச் செயலாளா் எஸ். ஸ்ரீதா், மாநிலத் துணைத் தலைவா் பயரி எம். கிருஷ்ணமணி, தஞ்சை மண்டலத் தலைவா் சீனிவாசன், மாநில துணைச் செயலாளா் எம். செந்தில்குமாா், தமிழக மலைவாழ் விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் எம். ராமா், மாவட்டத் தலைவா் எம். சுப்பையன், மாவட்டச் செயலாளா் சரவணன், துணைச் செயலாளா் முகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.