கனகாம்பாள் கோயில் முளைப்பாரி திருவிழா
மன்னாா்குடியை அடுத்த மூவநல்லூா் கனகாம்பாள் கோயிலில் முளைப்பாரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான முளைப்பாரி வழிபாட்டில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து முளைப்பாரிகளை தலையில் சுமந்து விநாயகா் கோயில் மற்றும் பிடாரியம்மன் கோயிலுக்குச் சென்று கும்மியடித்து வழிபட்டனா். பின்னா், தூபமிட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து, முளைப்பாரிகளை அங்குள்ள உப்புக்குளத்தில் விட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். இரவு, அன்ன வாகனத்தில் அம்மன் உற்சவம் நடைபெற்றது. இதில், திராளன பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.