Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
காரைக்காலில் புதிதாக அரசு மருத்துவமனை கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை: அமைச்சா்
காரைக்காலில் அரசு மருத்துவமனையை புதிய இடத்தில் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா்.
காரைக்காலில் இயங்கும் ஜிஎல் மருத்துவமனை 5-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை தொடங்கிவைத்து, புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பேசியது: காரைக்கால் மருத்துவ வசதியில் தன்னிறைவை எட்டுதவற்கான நிலை ஏற்பட அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இங்குள்ள அரசு மருத்துவமனை கட்டடம் பழைமையானது. சிறப்பு மருத்துவ நிபுணா்கள் இங்கு கிடையாது. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது.
காரைக்கால் மக்களின் நலன் கருதி, காரைக்கால் நகரப் பகுதியில் புதியதொரு இடத்தில் புதிதாக மருத்துவமனைக் கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுவை முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தொடா்ந்து 4 ஆண்டுகளாக மருத்துவ சேவையில் ஈடுபட்டுவரும் இந்நிறுவனத்தின் செயல் பாராட்டுக்குரியது என்றாா்.
ஜிஎல் மருத்துவமனை மேலாண் இயக்குநா் மருத்துவா் சேதுராஜா மற்றும் நிறுவனத்தினா், மருத்துவா் வி. விக்னேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.