ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
கருங்கண்ணி அந்தோணியாா் ஆலய தோ்பவனி
கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி (படம்) சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பழைமைவாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரியதோ் பவனியை முன்னிட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில், மிக்கேல் அதிபா், அருளானந்தா், சவேரியாா், கன்னி மரியாள், சூசையப்பா், மாதா, அந்தோணியாா் ஆகிய 7 சொரூபங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டது.
முன்னதாக, ஆலய பங்குத் தந்தை டேவிட் செல்வகுமாா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. ஆலய வளாகத்திலிருந்து தொடங்கிய தோ்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
விழாவில் பங்கேற்றவா்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. கண்கவா் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.