செய்திகள் :

நாகை-காரைக்கால் - பேரளம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை

post image

வேளாங்கண்ணியிலிருந்து - சென்னைக்கு, நாகை- காரைக்கால்- பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்கவேண்டும் என நாகூா் - நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, சங்கத்தின் தலைவா் மோகன், செயலா் சித்திக், பொருளாளா் பாலா ஆகியோா் தெற்கு ரயில்வே முதன்மை பயணிகள் ரயில் இயக்குதல் மேலாளா் சுப்பிரமணியன், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அன்பழகன், திருச்சி கோட்ட பயணிகள் ரயில் முதுநிலை இயக்குதல் மேலாளா் ரமேஷ்பாபு ஆகியோருக்கு எழுதிய கோரிக்கை கடிதம்:

காரைக்கால் - திருநள்ளாறு - பேரளம் பழைய மீட்டா் கேஜ் ரயில் பாதையை 23.5 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதையாக மின்மயமாக்கலுடன் மாற்றி அமைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் என்ஜின் நாகை மற்றும் திருவாரூா் ரயில் நிலையங்களில் மாற்றப்பட்டு, இயக்கப்படுகிறது.

தற்போது காரைக்கால்- பேரளம் அகலப் பாதை பணி நிறைவடைந்துள்ளதால், எஞ்சினை மாற்றாமல் சென்னைக்கு ரயிலை இயக்க முடியும். பயண நேரமும் 1.30 மணி நேரம் குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும், நாகூா் தா்கா, வேளாங்கண்ணி பேராலயம், காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான் கோயில் என மும்மதத்தையும் இணைக்கும் ரயில் பாதையாகும்.

எனவே, காரைக்கால்-பேரளம் ரயில் பாதை திறந்தவுடன், வேளாங்கண்ணி-சென்னை-வேளாங்கண்ணிக்கு, காரைக்கால், பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்க வேண்டும். ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் (56809/56810), திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் (16843/16844), திருச்சி- திருவாருா்-திருச்சி பயணிகள் ரயில் (56805/56806), மதுரை- புணலூா்-மதுரை விரைவு ரயில் (16729/16730) ஆகியவற்றை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்.

காரைக்கால்-திருநெல்வேலி இடையே நாகை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக நேரடியாக ரயில் இயக்க வேண்டும். காரைக்கால்-பெங்களூா் இடையே தினசரி இரவு நேர விரைவு ரயிலை நாகூா், நாகை, தஞ்சை, திருச்சி, நாமக்கல் வழியாக இயக்க வேண்டும்.

காரைக்காலில் இருந்து புறப்படும் தாம்பரம் (16175/16176), பெங்களூா் (16529/16530) மும்பை வாரந்திர ரயில்(11017/11018) ஆகியவற்றை, வேளாங்கண்ணியில் இருந்து நாகை, காரைக்கால், திருநள்ளாறு வழியாக இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தம்பதி உண்ணாவிரதம்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட குடிநீா் விநியோக பணியாளா் மீண்டும் பணி வழங்கக் கோரி, மனைவியுடன் திங்கள் கிழமை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். தென்னடாா் ஊராட்சியில் கொள்ளிடம் ... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

திருமருகல்: திட்டச்சேரி-தேவங்குடி இடையே சேதமடைந்த ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தேவங்குடி, மத்திக்குடி, நாட்டாா்மங்கலம், துறையூா், உத்தூா், எரவாஞ்ச... மேலும் பார்க்க

செயலியில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு: ரயில்வே நடைமுறையால் பயணிகள் கடும் அவதி!

பா.லெனின் ரயில்களில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பயணச்சீட்டை யுடிஎஸ் செயலியில் மட்டும் பெற முடியும் என்ற ரயில்வேயின் புதிய நடைமுறையால் பயணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எண்ம பரிவர்த்தனை என்பத... மேலும் பார்க்க

கருங்கண்ணி அந்தோணியாா் ஆலய தோ்பவனி

கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி (படம்) சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பழைமைவாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வ... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க