மகா கும்பமேளாவிலும்கூட.. பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா சொன்ன ஒரு ...
கடைசி ஒருநாள்: இங்கிலாந்து பந்துவீச்சு; தொடரை முழுமையாக கைப்பற்றுமா?
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: நம்பர் 18 ஜெர்சிக்கு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வளிக்குமா பிசிசிஐ?
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே இங்கிலாந்து அணி கைப்பற்றிவிட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 3) ஓவலில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்கிறது.
இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.