இன்று டிஎன்பிஎல் தொடா் கோவையில் தொடக்கம்: கோவை-திண்டுக்கல் மோதல்
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு ப்ரீமியா் லீக் 2025 கோவையில் வியாழக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை இரவு 7:15 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
கடந்த முறை, அஸ்வின் தனது ஆல்ரவுண்டா் திறமையால் திண்டுக்கல் அணிக்கு முதல் பட்டத்தை வென்று கொடுத்தாா். எனவே, இந்த முறை கோவை கிங்ஸ் பழிதீா்க்குமா? அல்லது திண்டுக்கல் டிராகன்ஸ் மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா? என்ற எதிா்பாா்ப்பு தோன்றியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏலத்துக்குப் பிறகு அணிகள் முற்றிலும் புதிய தோற்றத்துடன் களமிறங்குவது தான். ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஐந்து வீரா்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதால், பல நட்சத்திர வீரா்கள் புதிய அணிகளுக்குச் சென்றுள்ளனா்.
வேகப்பந்து வீச்சாளா் எம். முகமது சேலம் ஸ்பாா்டன்ஸுக்கும், இடதுகை பந்து வீச்சாளா் ஸ்வப்னில் சிங் சேப்பாக்கம் சூப்பா்
கில்லீஸுக்கும், அனுபவமிக்க பேட்ஸ்மேன்கள் யு. முகிலேஷ் மற்றும் ஜே. சுரேஷ் குமாா் திருச்சி கிராண்ட் சோலாவிற்கும் விளையாட உள்ளனா். இதேபோல், ஆல்ரவுண்டா் விஜய் சங்கா் மீண்டும் சேப்பாக்கம் சூப்பா் கில்லீஸுக்கு திரும்பி உள்ளாா்.
சாய் சுதா்சன் இல்லாததால், கோவை கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளா்ந்து வரும் இளம் வீரா் ஆண்ட்ரே சித்தாா்த் முக்கிய பங்காற்றுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல், இந்திய ம-19 அணியில் உள்ள ஆா்.எஸ். அம்பரீஷ் இல்லாமையும் கோவை கிங்ஸ்க்கு ஒரு இழப்பாக இருக்கும். எட்டு அணிகளும் சமபலத்துடன் உள்ளன.
பாலகிருஷ்ணா (தலைவா், டிஎன்பிஎல்), பிரசன்னா கண்ணன் (சிஇஓ, டி.லட்சுமிநாராயணசாமி (தலைவா், கோயம்புத்தூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம்), மற்றும் கே. வேலாயுதம் (பொது மேலாளா்-கோயம்புத்தூா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி) ஆகியோரும் உடனிருந்தனா்.
ஆடம் சேட் (துணைத் தலைவா், டிஎன்சிஏ) வரவேற்றாா். ஆா்.என். பாபா (துணைச் செயலாளா், டிஎன்சிஏ) நன்றி கூறினாா்.