கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும்...
ஷுப்மன் கில்லுக்கு அழுத்தம் இருக்கும், ஆனால்... முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கூறுவதென்ன?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு அழுத்தம் இருக்கும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதையும் படிக்க: ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் கோப்பை யாருக்கு?
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் செயல்படவுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
அழுத்தம் இருக்கும், ஆனால்...
இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில்லுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, அழுத்தம் இருக்கும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் இளம் வீரர். அவர் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. கிரிக்கெட் வீரர் ஒருவர் அவரது ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டு உலகின் பல்வேறு இடங்களிலும் ரன்கள் குவிக்க வேண்டும். ஷுப்மன் கில் மிகவும் திறமையான வீரர். இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தும்போது, அவருக்கு அழுத்தம் இருக்கும். அவர் பார்ப்பதற்கு முதிர்ச்சியான வீரராக தெரிகிறார். சவாலை ஏற்றுக்கொண்டு அவர் சிறப்பாக செயல்படுவார் என நினைக்கிறேன் என்றார்.
இதையும் படிக்க: நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்
இதுவரை இந்திய அணிக்காக 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில், 1,893 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.