செய்திகள் :

ஷுப்மன் கில்லுக்கு அழுத்தம் இருக்கும், ஆனால்... முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கூறுவதென்ன?

post image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு அழுத்தம் இருக்கும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதையும் படிக்க: ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் கோப்பை யாருக்கு?

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் செயல்படவுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

அழுத்தம் இருக்கும், ஆனால்...

இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில்லுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, அழுத்தம் இருக்கும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் இளம் வீரர். அவர் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. கிரிக்கெட் வீரர் ஒருவர் அவரது ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டு உலகின் பல்வேறு இடங்களிலும் ரன்கள் குவிக்க வேண்டும். ஷுப்மன் கில் மிகவும் திறமையான வீரர். இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தும்போது, அவருக்கு அழுத்தம் இருக்கும். அவர் பார்ப்பதற்கு முதிர்ச்சியான வீரராக தெரிகிறார். சவாலை ஏற்றுக்கொண்டு அவர் சிறப்பாக செயல்படுவார் என நினைக்கிறேன் என்றார்.

இதையும் படிக்க: நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்

இதுவரை இந்திய அணிக்காக 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில், 1,893 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று டிஎன்பிஎல் தொடா் கோவையில் தொடக்கம்: கோவை-திண்டுக்கல் மோதல்

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு ப்ரீமியா் லீக் 2025 கோவையில் வியாழக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை ... மேலும் பார்க்க

சிறுவயது தோழியைக் கரம்பிடிக்கிறார் குல்தீப் யாதவ்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் குல்தீப் யாதவ் தனது சிறுவயது காதலியைக் கரம்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ‘சைனாமேன்’ சுழற்பந்து வீச்சாளரும், தில்லி அணியின் வீரருமான ... மேலும் பார்க்க

ஈ சாலா கப் நமது..! ஆர்சிபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல்லில் கோப்பையை வென்ற ஆர்சிபி மற்றும் விராட் கோலிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்று... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு!

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய அணி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ... மேலும் பார்க்க

1,60,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன! ஆஷஸ் தொடக்க நாள் விற்பனை அமோகம்!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் தொடக்க நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து கிரிக... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள்: இங்கிலாந்து பந்துவீச்சு; தொடரை முழுமையாக கைப்பற்றுமா?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் ட... மேலும் பார்க்க