தெலங்கானா மக்களின் விருப்பங்கள் இன்னும் நிறைவேறவில்லை: அமைச்சர்
கடந்த 10 ஆண்டுகளில் தெலங்கானா மக்களின் விருப்பங்கள் நிறைவேறவில்லை என்று நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு மாநில பாஜக அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அமைச்சர் கிஷன் ரெட்டி பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது,
உபரி பட்ஜெட்டுடன் உருவான தெலங்கானா மாநிலம் இன்று ரூ.10 லட்சம் கோடி கடனில் உள்ளது.
பலரின் தியாகத்தால் தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. தெலங்கானா இயக்கம் வன்முறையற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், அதில் பாஜக முக்கிய பங்கு வகித்ததாகக் கூறினார்.
தெலங்கானாவுக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கு ஆதரவாக முடிவெடுத்த முதல் கட்சி பாஜக தான். தெலங்கானா மாநிலம் உருவான பிறகு, அதன் நிதி நீர்ப்பாசனத் திட்டங்களின் பெயரில் கொள்ளையடிக்கப்பட்டது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினர். ஆனால் கேசிஆர் குடும்பத்திற்கு வேலை கிடைத்ததே தவிர இளைஞர்களுக்கு அல்ல.. மக்கள் போராடிய ஆசைகள் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.
பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மீது சாடிய கிஷன் ரெட்டி, தெலங்கானா பங்காரு (தங்க) தெலங்கானாவாக மாறவில்லை. ஆனால் கேசிஆரின் குடும்பம் பங்காரு குடும்பமாக மாறியது. தெலங்கானாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறிய அவர், மாநிலத்திற்கு மற்றொரு மாற்றம் தேவை என்றார்.
தெலங்கானா தியாகிகளின் ஆசைகளை நிறைவேற்றும் பொறுப்பை பாஜக ஏற்றுக்கொள்கிறது என்று கூறினார். மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர் மக்களை வாழ்த்தி, மாநிலத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மாநிலத்திற்கென்று புகழ்பெற்ற வரலாறும், விலைமதிப்பற்ற கலாசார சிறப்பைக் கொண்டுள்ளது. தெலங்கானாவில் அற்புதமான இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு ரத்தினம் என்று அவரின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் வளர்ச்சியில் தெலங்கானா மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களின் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.