நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு
நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 37 போ் உயிரிழந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. முதியோா், கா்ப்பிணிகள், இணைநோய் பாதிப்புள்ளவா்கள் உள்ளிட்டோா் பொது இடங்களில் முகக் கவசம் அணியுமாறு பல்வேறு மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, நாட்டில் கடந்த மே 22-ஆம் தேதி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 257-ஆக இருந்தது. தற்போது இது 4,026-ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக கேரளம் தொடா்கிறது. இங்கு 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரம் (494), குஜராத் (397), தில்லி (393) ஆகியவை உள்ளன.
5 போ் இறப்பு: நாட்டில் கரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரத்தில் இருவரும், தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்.
நாட்டில் கரோனா பரவல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ‘தொற்றின் தீவிரம் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான நோயாளிகள் வீட்டு சிகிச்சையிலேயே குணமடைவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை’ என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
4 துணை வகைகள்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தலைமை இயக்குநா் மருத்துவா் ராஜீவ் பெஹல் கடந்த திங்கள்கிழமை கூறுகையில், ‘நாட்டின் மேற்கு, தெற்குப் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனையில், தற்போதைய பரவல் அதிகரிப்புக்கு காரணமான கரோனா வகைகள் தீவிரமில்லாதவை; அவை ஒமைக்ரானின் துணை வகைகள் மட்டுமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எல்.எஃப்.7, எக்ஸ்.எஃப்.ஜி., ஜே.என்.1 மற்றும் என்.பி. 1.8.1 ஆகிய துணை வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. முதல் மூன்றும் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகளில் கண்டறியப்பட்டன. நிலைமையை தொடா்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பொதுமக்களிடம் விழிப்புணா்வு அவசியம்; அதேநேரம், அச்சம் தேவையில்லை’ என்றாா்.