செய்திகள் :

நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு

post image

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 37 போ் உயிரிழந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. முதியோா், கா்ப்பிணிகள், இணைநோய் பாதிப்புள்ளவா்கள் உள்ளிட்டோா் பொது இடங்களில் முகக் கவசம் அணியுமாறு பல்வேறு மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, நாட்டில் கடந்த மே 22-ஆம் தேதி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 257-ஆக இருந்தது. தற்போது இது 4,026-ஆக அதிகரித்துள்ளது.

தேசிய அளவில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக கேரளம் தொடா்கிறது. இங்கு 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரம் (494), குஜராத் (397), தில்லி (393) ஆகியவை உள்ளன.

5 போ் இறப்பு: நாட்டில் கரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரத்தில் இருவரும், தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்.

நாட்டில் கரோனா பரவல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ‘தொற்றின் தீவிரம் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான நோயாளிகள் வீட்டு சிகிச்சையிலேயே குணமடைவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை’ என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

4 துணை வகைகள்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தலைமை இயக்குநா் மருத்துவா் ராஜீவ் பெஹல் கடந்த திங்கள்கிழமை கூறுகையில், ‘நாட்டின் மேற்கு, தெற்குப் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனையில், தற்போதைய பரவல் அதிகரிப்புக்கு காரணமான கரோனா வகைகள் தீவிரமில்லாதவை; அவை ஒமைக்ரானின் துணை வகைகள் மட்டுமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எல்.எஃப்.7, எக்ஸ்.எஃப்.ஜி., ஜே.என்.1 மற்றும் என்.பி. 1.8.1 ஆகிய துணை வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. முதல் மூன்றும் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகளில் கண்டறியப்பட்டன. நிலைமையை தொடா்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பொதுமக்களிடம் விழிப்புணா்வு அவசியம்; அதேநேரம், அச்சம் தேவையில்லை’ என்றாா்.

பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் குழு!

பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் ஒரே வார்த்தைகள், என பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் உறுப்பினர், சாமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா?

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரேஸில் நாட்டில் அடுத்த மாதம் (ஜூலை 6) பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்ட... மேலும் பார்க்க

பெங்களூரு: காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்! - முதல்வர் உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையர் உள்பட 5 உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில், போதிய பாதுகா... மேலும் பார்க்க

கரோனா பரவல்: கர்நாடகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித... மேலும் பார்க்க

அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனை 17 சதவிகிதமும், கார் விற்... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதவின் படம் குறித்த விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது. கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்ன... மேலும் பார்க்க