செய்திகள் :

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

post image

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது.

நோயாளிகள் நலன் மற்றும் மருத்துவத் தொழிலில் நெறிமுறைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு மற்றும் மேலாண்மையைக் கண்காணிக்கும் அமைப்பாகும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் டிஜிஹெச்எஸ் அண்மையில் அனுப்பிய உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவமனை வளாகங்களுக்குள் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையே மீண்டும் ஒருமுறை அறிவுறுத்துகிறோம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவமனை தலைவா்கள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இது தொடா்பாக இயக்குநரகத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவா்களைச் சந்தித்துப் பேசி, தங்கள் நிறுவன மருந்துகளைப் பரிந்துரைக்கச் செய்யும் செயலில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம், மருத்துவமனை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டால், மின்னஞ்சல் அல்லது இதர எண்ம ஊடகங்கள் வாயிலாக மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் தகவல்களைப் பகிரலாம் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் குழு!

பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் ஒரே வார்த்தைகள், என பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் உறுப்பினர், சாமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா?

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரேஸில் நாட்டில் அடுத்த மாதம் (ஜூலை 6) பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்ட... மேலும் பார்க்க

பெங்களூரு: காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்! - முதல்வர் உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையர் உள்பட 5 உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில், போதிய பாதுகா... மேலும் பார்க்க

கரோனா பரவல்: கர்நாடகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித... மேலும் பார்க்க

அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனை 17 சதவிகிதமும், கார் விற்... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதவின் படம் குறித்த விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது. கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்ன... மேலும் பார்க்க