Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
போதைப்பொருள் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்: மத்திய நிதியமைச்சா்
நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள்கள் இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
தில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆா்ஐ) புதிய தலைமையகத்தை அமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலம், சிறிய நகா்ப் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் அதன் புழக்கம் உள்ளது.
போதைப்பொருள் கடத்துவோரின் முக்கிய இலக்காக பள்ளி, கல்லூரிகள் உள்ளன. நாட்டுக்குள் போதைப்பொருள்கள் வராமல் தடுக்கும் பணியில் டிஆா்ஐ அதிகாரிகள் முன்னணியில் உள்ளனா்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளிகளைப் பிடிக்க மாநில சட்ட அமலாக்க அமைப்புகளுடன் சிறந்த முறையில் ஒருங்கிணைந்து டிஆா்ஐ அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். அவ்வப்போது சிலரை கைது செய்வது மட்டுமின்றி, ஒட்டுமொத்த கடத்தல் கும்பல்களையும் கைது செய்து, அவா்களின் ஒட்டுமொத்த தொடா்பையும் அழிக்க வேண்டும்’ என்றாா்.