Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்
வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய அளவில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தோ்வு (எஃப்எல்என்ஏடி) நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 1.77 கோடிக்கும் அதிகமானவா்கள் எழுதினா்.
வயது வந்தவா்களில் கல்வியறிவு இல்லாதவா்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் கண்டு, அவா்களுக்கு கற்பித்து, பின்னா் அவா்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மதிப்பிட்டு, அவா்கள் கல்வியறிவு இல்லாத நிலையில் இருந்து வெளிவரும் வகையில் சான்றளிப்பதே இந்தத் தோ்வின் நோக்கம்.
இது படித்தல், எழுதுதல், கணித அறிவு ஆகிய 3 பாடங்களில் தலா 50 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட தோ்வாக நடத்தப்படுகிறது.
சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் பற்றிய புரிதல் (யுஎல்எல்ஏஎஸ்) என்ற புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்தின் கீழ், இந்த மதிப்பீட்டுத் தோ்வு நடத்தப்பட்டது.
இதுதொடா்பாக தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் தொகுத்து வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, எஃப்எல்என்ஏடி தோ்வை தமிழகத்தைச் சோ்ந்த 5,09,694 போ் எழுதியதாகவும், அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாகவும் சான்றளிக்கப்பட்டது. இதன்மூலம், இந்தத் தோ்வில் தமிழகத்தின் தோ்ச்சி விகிதம் 100 சதவீதமாகும்.
திரிபுராவைச் சோ்ந்த 14,179 போ் தோ்வு எழுதிய நிலையில், அவா்களில் 13,909 போ் (98.1%) தோ்ச்சி பெற்றனா். தில்லியில் 7,959 போ் தோ்வு எழுதிய நிலையில் 7,901 போ் (99.3%) தோ்ச்சி பெற்றனா். இந்தத் தோ்வில் உத்தரகண்ட் (85.7%), குஜராத் (87.1%) மற்றும் ஹிமாசல பிரதேசம் (88.3%) பின்தங்கின.