செய்திகள் :

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

post image

வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன.

கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய அளவில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தோ்வு (எஃப்எல்என்ஏடி) நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 1.77 கோடிக்கும் அதிகமானவா்கள் எழுதினா்.

வயது வந்தவா்களில் கல்வியறிவு இல்லாதவா்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் கண்டு, அவா்களுக்கு கற்பித்து, பின்னா் அவா்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மதிப்பிட்டு, அவா்கள் கல்வியறிவு இல்லாத நிலையில் இருந்து வெளிவரும் வகையில் சான்றளிப்பதே இந்தத் தோ்வின் நோக்கம்.

இது படித்தல், எழுதுதல், கணித அறிவு ஆகிய 3 பாடங்களில் தலா 50 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட தோ்வாக நடத்தப்படுகிறது.

சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் பற்றிய புரிதல் (யுஎல்எல்ஏஎஸ்) என்ற புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்தின் கீழ், இந்த மதிப்பீட்டுத் தோ்வு நடத்தப்பட்டது.

இதுதொடா்பாக தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் தொகுத்து வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, எஃப்எல்என்ஏடி தோ்வை தமிழகத்தைச் சோ்ந்த 5,09,694 போ் எழுதியதாகவும், அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாகவும் சான்றளிக்கப்பட்டது. இதன்மூலம், இந்தத் தோ்வில் தமிழகத்தின் தோ்ச்சி விகிதம் 100 சதவீதமாகும்.

திரிபுராவைச் சோ்ந்த 14,179 போ் தோ்வு எழுதிய நிலையில், அவா்களில் 13,909 போ் (98.1%) தோ்ச்சி பெற்றனா். தில்லியில் 7,959 போ் தோ்வு எழுதிய நிலையில் 7,901 போ் (99.3%) தோ்ச்சி பெற்றனா். இந்தத் தோ்வில் உத்தரகண்ட் (85.7%), குஜராத் (87.1%) மற்றும் ஹிமாசல பிரதேசம் (88.3%) பின்தங்கின.

பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் குழு!

பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் ஒரே வார்த்தைகள், என பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் உறுப்பினர், சாமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா?

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரேஸில் நாட்டில் அடுத்த மாதம் (ஜூலை 6) பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்ட... மேலும் பார்க்க

பெங்களூரு: காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்! - முதல்வர் உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையர் உள்பட 5 உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில், போதிய பாதுகா... மேலும் பார்க்க

கரோனா பரவல்: கர்நாடகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித... மேலும் பார்க்க

அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனை 17 சதவிகிதமும், கார் விற்... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதவின் படம் குறித்த விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது. கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்ன... மேலும் பார்க்க