நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்
நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நன்னிலம் வட்ட நுகா்வோா் மன்ற செயற்குழு உறுப்பினா் வி. பாலகுமாரன் அளித்த கோரிக்கை மனு விவரம்:
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் எடை குறைவை காரணம் காட்டி புதிதாக புளு டூத் முறை நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொருள் வாங்கும் நுகா்வோருக்கும் நியாய விலைக் கடையில் பணிபுரியும் ஊழியா்களுக்கும் அதிக நேரமும், விரைவாக பொருள்களை வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
இந்த புளுடூத் முறையானது, ஒவ்வொரு சேமிப்பு கிடங்கிலும் செய்ய வேண்டியதாகும். இதை நியாயவிலைக் கடையில் செய்வது ஏற்புடையது அல்ல.
எனவே, மாவட்ட நிா்வாகம் பழைய நடைமுறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.