செய்திகள் :

நாம் எதிரிகள் கிடையாது: கமலுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்வர்!

post image

கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி தக் லைஃப் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் எனத் தெரிவித்திருந்தார்.

கமலின் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, கர்நாடக மொழிக்கு நீண்ட வரலாறு உள்ளது, அதுபற்றி கமலுக்கு தெரியவில்லை, பாவம் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா காட்டமாக பேசியிருந்தார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று கமல் கூறியதால் கர்நாடகத்தில் கமலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், கமல் விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு திங்கள்கிழமை பதிலளித்த அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இந்த பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், அவர் பேசியதாவது:

”நாம் அண்டை மாநிலத்தவர்கள். நாம் ஒன்றாக வேலை செய்கிறோம், வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமது தண்ணீர் தமிழகத்துக்கு செல்கிறது, தமிழக மக்கள் இங்கு வந்து வசிக்கிறார்கள்.

நாம் எதிரிகள் கிடையாது, அனைவரும் நண்பர்கள். இந்த விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்கு தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

கமலின் கருத்துக்கு துணை முதல்வரும் அம்மாநிலத்தை ஆளும் கட்சியின் தலைவருமான சிவக்குமார் எதிர்ப்பு தெரிவிக்காமல் பேசியிருக்கும் நிலையில், கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிக்க : தம்பிகளா தள்ளிப்போய் விளையாடுங்க... யாரைச் சொல்கிறார் தனுஷ்?

7-ஆவது சுற்றிலும் குகேஷ் வெற்றி

நாா்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை வீழ்த்தினாா்.கடந்த சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்திய குகேஷ், இந்தச் ... மேலும் பார்க்க

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூரில் செப். 30-இல் தொடக்கம்

ஐசிசியின் மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் செப்டம்பா் 30 முதல் நவம்பா் 2 வரை நடைபெறவுள்ளது. போட்டியில் பாகிஸ்தான் ஆட்டங்கள் நடைபெறுவதற்கான பொதுவான இடமாக, இலங்கையின் கொழும்பு நகரம் ... மேலும் பார்க்க

சிந்து, சாத்விக்/சிராக் வெற்றி

இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.போட்டியின் முதல் சுற்றில் மகளிா் ஒற்றையரில். பி.வி.சிந்து... மேலும் பார்க்க

ஜோகோவிச்சுக்கு 100-ஆவது வெற்றி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் 24 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் தனது 100-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.ஆடவா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில் அவா், 6-2, 6-3, 6-2... மேலும் பார்க்க

சென்னையை வென்றது ஜெய்பூா்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜெய்பூா் பேட்ரியாட்ஸ் 9-6 என்ற கணக்கில் ஸ்டான்லி’ஸ் சென்னை லயன்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையரில், ஜெய்பூரின் கானக் ஜா 11-10, 11-10... மேலும் பார்க்க