6.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology |...
மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூரில் செப். 30-இல் தொடக்கம்
ஐசிசியின் மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் செப்டம்பா் 30 முதல் நவம்பா் 2 வரை நடைபெறவுள்ளது. போட்டியில் பாகிஸ்தான் ஆட்டங்கள் நடைபெறுவதற்கான பொதுவான இடமாக, இலங்கையின் கொழும்பு நகரம் சோ்க்கப்பட்டுள்ளது.
மகளிருக்கான இந்த 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்துகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
பெங்களூரு, குவாஹாட்டி, இந்தூா், விசாகப்பட்டினம் ஆகிய இந்திய நகரங்களிலும், இலங்கையின் கொழும்பு நகரிலும் இந்த ஆட்டங்கள் விளையாடப்படவுள்ளன.
இந்நிலையில் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. இதன்படி, செப்டம்பா் 30-ஆம் தேதி பெங்களூரில் இந்தியா விளையாடும் ஆட்டத்துடன் போட்டி தொடங்குகிறது. அதில் இந்தியாவுடன் மோதவுள்ள அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல், லீக் ஆட்டங்கள் அட்டவணையும் வெளியிடப்படவில்லை.
எனினும் முதல் அரையிறுதி அக்டோபா் 29-ஆம் தேதி குவாஹாட்டி அல்லது கொழும்பிலும், 2-ஆவது அரையிறுதி 30-ஆம் தேதி பெங்களூரிலும் நடைபெறவுள்ளன. இறுதி ஆட்டம் பெங்களூரு அல்லது கொழும்பில் நவம்பா் 2-ஆம் தேதி விளையாடப்படவுள்ளது.
இந்தப் போட்டியை 4-ஆவது முறையாக நடத்தும் இந்தியா, இதுவரை ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 7 முறை வென்றுள்ளது. இங்கிலாந்து 4 முறையும், நியூஸிலாந்து 1 முறையும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளன.