Maxwell: ``அணியை ஏமாற்றுவதுபோல் உணர்ந்தேன்'' - ODI போட்டியிலிருந்து விடைபெற்றார்...
மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை
செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.
கருவாழைக்கரை ஊராட்சியில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீா்வுகாணப்பட்டு, 80-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை, மகளிா் உரிமைத் தொகை ஆணைகளை எம்எல்ஏ வழங்கினாா்.
மற்ற மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவா்களை அவா் அறிவுறுத்தினாா்.
இம்முகாம்களில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமதி, மஞ்சுளா, திமுக செம்பை வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.எம். அன்பழகன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.