செய்திகள் :

குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை!

post image

குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2025 - 26 கல்வி ஆண்டுக்கான பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில்,

கோடை விடுமுறை முடிந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவ - மாணவியருக்கு இன்று சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 1,187 பள்ளிகளிலும் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்களால் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு இந்த கல்வி ஆண்டு தொடங்கப்பட்டு இருக்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர்.

தொடர்ந்து நம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்களை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்னும் ஒரு மாதத்தில் முழுமையான கணக்கு தெரியவரும். ஆனால் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஜூன் இறுதி வரை சேர்க்கை நடைபெறுகிறது. இந்த மாத இறுதியில்தான் மொத்தமான மாணவர்களின் எண்ணிக்கை தெரிய வரும்.

அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படுவதாக புகார் எழுந்து இருக்கிறது. இதுபோன்று நடைபெறுவதாக தகவல் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து அதற்கான அறிவுரை வழங்கி இருக்கிறோம்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து செல்வது நல்லதுதான். மருத்துவமனை வளாகத்திற்குள் முகக்கவசம் அணிய வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிக்க | உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!!

தங்கம் விலை இன்று உயர்ந்தது! எவ்வளவு?

தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 120 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு சில நாள்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில் தங்கத்தின்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் விநாயகர் சிலை உடைப்பு: நள்ளிரவில் மர்ம நபர்கள் அட்டூழியம்!

ஆலங்குளத்தில் நள்ளிரவில் மர்ம நபர்களால் விநாயகர் சிலை உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன் கோட்டையில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் ... மேலும் பார்க்க

‘யாா் அந்த சாா்’ கேள்வி எழுப்பினால் இனி நீதிமன்ற அவமதிப்பு!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனைத் தவிா்த்து வேறு எவருக்கும் தொடா்பு இல்லை என்றும், ‘யாா் அந்த சாா்’ எனகேள்வி எழுப்பினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும்... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை: செய்திகள் நேரலை

எந்தெந்த குற்றத்துக்கு எவ்வளவு தண்டனை?அண்ணா பல்கலை மாணவியை கடுமையாக தாக்கியதற்காக 7 ஆண்டுகள், ஆதாரங்களை அழித்தற்கு 3 ஆண்டுகள், தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறியக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை ... மேலும் பார்க்க

5 நாள் அரசுமுறைப் பயணமாக பியூஷ் கோயல் பிரான்ஸ், இத்தாலி பயணம்

புது தில்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து 2 நாள் அரசுமுறைப் பயணமாக இத்தாலி ச... மேலும் பார்க்க