செய்திகள் :

5 நாள் அரசுமுறைப் பயணமாக பியூஷ் கோயல் பிரான்ஸ், இத்தாலி பயணம்

post image

புது தில்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து 2 நாள் அரசுமுறைப் பயணமாக இத்தாலி செல்கிறார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கான ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தை (ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை) ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.

இந்த பயணத்தின் முதல் கட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் சென்றுள்ள பியூஷ் கோயல், ​​அந்நாட்டுப் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எரிக் லோம்பார்ட், அந்நாட்டு வர்த்தக அமைச்சர் லாரன்ட் செயிண்ட்-மார்ட்டின் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது இந்திய-பிரான்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, வர்த்தக - முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.

பிரதமர் மோடி - ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு

இதற்கு இடையே பாரீஸில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். அமெரிக்கா, சிங்கப்பூா், சவுதி அரேபியா, தென்கொரியா, நைஜீரியா, பிரேசில், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சா்களையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

இந்தப் பயணம் ஐரோப்பிய நாடுகளுடனான வா்த்தக ரீதியிலான இந்தியாவின் நல்லுறவுக்கு மேலும் உத்வேகமளிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பயணத்தைத் தொடா்ந்து, இத்தாலிக்கு அவர் செல்லவுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுடன் வா்த்தக ரீதியிலான இந்தியாவின் நல்லுறவுக்கு இந்த பயணம் மேலும் உத்வேகமளிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை இன்று உயர்ந்தது! எவ்வளவு?

தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 120 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு சில நாள்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில் தங்கத்தின்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் விநாயகர் சிலை உடைப்பு: நள்ளிரவில் மர்ம நபர்கள் அட்டூழியம்!

ஆலங்குளத்தில் நள்ளிரவில் மர்ம நபர்களால் விநாயகர் சிலை உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன் கோட்டையில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் ... மேலும் பார்க்க

‘யாா் அந்த சாா்’ கேள்வி எழுப்பினால் இனி நீதிமன்ற அவமதிப்பு!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனைத் தவிா்த்து வேறு எவருக்கும் தொடா்பு இல்லை என்றும், ‘யாா் அந்த சாா்’ எனகேள்வி எழுப்பினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும்... மேலும் பார்க்க

குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை!

குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு பெண்கள்... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை: செய்திகள் நேரலை

எந்தெந்த குற்றத்துக்கு எவ்வளவு தண்டனை?அண்ணா பல்கலை மாணவியை கடுமையாக தாக்கியதற்காக 7 ஆண்டுகள், ஆதாரங்களை அழித்தற்கு 3 ஆண்டுகள், தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறியக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை ... மேலும் பார்க்க