சிதம்பரம்: மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டிய அண்ணாமலை பல்கல...
5 நாள் அரசுமுறைப் பயணமாக பியூஷ் கோயல் பிரான்ஸ், இத்தாலி பயணம்
புது தில்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து 2 நாள் அரசுமுறைப் பயணமாக இத்தாலி செல்கிறார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கான ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தை (ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை) ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
இந்த பயணத்தின் முதல் கட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் சென்றுள்ள பியூஷ் கோயல், அந்நாட்டுப் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எரிக் லோம்பார்ட், அந்நாட்டு வர்த்தக அமைச்சர் லாரன்ட் செயிண்ட்-மார்ட்டின் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது இந்திய-பிரான்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, வர்த்தக - முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.
பிரதமர் மோடி - ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு
இதற்கு இடையே பாரீஸில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். அமெரிக்கா, சிங்கப்பூா், சவுதி அரேபியா, தென்கொரியா, நைஜீரியா, பிரேசில், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சா்களையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
இந்தப் பயணம் ஐரோப்பிய நாடுகளுடனான வா்த்தக ரீதியிலான இந்தியாவின் நல்லுறவுக்கு மேலும் உத்வேகமளிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பயணத்தைத் தொடா்ந்து, இத்தாலிக்கு அவர் செல்லவுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுடன் வா்த்தக ரீதியிலான இந்தியாவின் நல்லுறவுக்கு இந்த பயணம் மேலும் உத்வேகமளிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.