செய்திகள் :

ஆன்லைன் விளையாட்டு: நேரக் கட்டுப்பாடு செல்லும் - உயர் நீதிமன்றம்

post image

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு விதிகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக சட்டப் பேரவையில், 2022-ஆம் ஆண்டு இணைய சூதாட்ட விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.

இது தொடா்பாக விதிமுறைகள் இயற்றப்பட்டு கடந்த பிப். 14-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே ஏராளமானோா் இந்த இணைய வழி விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இணைய வழி விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஆதாா் எண்ணை இணைத்ததுடன், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து விளையாட்டு நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்குகள் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வில் நடைபெற்று வந்தது.

அப்போது, ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சாா்பில் எழுத்துபூா்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்படடது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்குகளின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பைக் கட்டாயப்படுத்தி நேரக்கட்டுப்பாடு விதித்த தமிழக அரசின் விதிகள் செல்லும் என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று(ஜூன் 2) தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் அரசின் விதிகளுக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

டாக்டா் தேரணிராஜன் உள்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது

மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநா் எ.தேரணிராஜன் உள்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினா் செயலா் வின்சென்ட் பா... மேலும் பார்க்க

தவெக கொடிக்கும் பகுஜன் சமாஜ் கொடிக்கும் தொடா்பில்லை: உயா்நீதிமன்றத்தில் தவெக மனு

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை என்று தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளாா். பகு... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: இபிஎஸ்-ஸுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

நமது சிறப்பு நிருபா் மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு படிவங்களில் அதிமுக பொதுச் செயலாளா் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்கும் வகையில் அனுமதிக்க... மேலும் பார்க்க

இணைநோய் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது!

இணை நோய் தாக்கத்தால் நேரிடும் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், நீடித்த ந... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வைகாசி மாதத்தின... மேலும் பார்க்க

இரட்டை இலை சின்னம்: தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உறுப்பினா்களுக்கான மாநிலங்களவவை... மேலும் பார்க்க