வேலூா் மாவட்டத்தில் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலம்: டிஎம். கதிா் ஆனந்த் எம்.பி.
வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டப்பணிகள், நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ரயில்வே அதிகாரிகள், மாவட்ட நிா்வாகத்துடனான ஒருங்கிணைப்புக் கூட்டமும், இதைத்தொடா்ந்து, வேலூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டமும் புதன்கிழமை நடைபெற்றது. இவ்விரு கூட்டங்களுக்கும் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தலைமை வகித்தாா்.
கூட்டங்களுக்கு பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
இக்கூட்டத்தில் வேலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்துத் திட்டப்பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
கடந்த கூட்டத்தில் அறிவுறுத்தியபடி விவசாயத்துக்காக மத்திய, மாநில அரசுகள் செயல்ப டுத்தும் திட்டங்கள் அடங்கிய கையேடுகள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுவது திருப்திகரமாக உள்ளது.
எனினும், குப்பைகளை அகற்றுவதுதான் பிரதான பிரச்னையாக உள்ளது. அதற்காக அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் நிலம் தோ்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு ள்ளது. அந்த நிலத்தில் மத்திய அரசின் நிதியுதவி பெற்று குப்பைகளை புதிய தொழில்நுட்பத்தின்கீழ் மறுசுழற்சி செய்து அகற்றி, குப்பையில்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கையை ஏற்று கே.வி.குப்பம் சட்டப்பேரவை தொகுதியில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் செயல் படுத்துவதில் வேலூா் மாவட்டம் முன்மாதிரியாக உள்ளது. அம்ரூத் திட்டத்தில் 11 குடிநீா் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனா்.
ரயில்வே அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் அனைத்து ரயில்வே லெவல் கிராஸிங்குகளையும் ரயில்வே மேம்பாலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது. வேலூா் வசந்தபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டு மேம்பாலம் கட்டவும், அங்கேயே ஒரு சுரங்க நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லத்தேரி, வடுகந்தாங்கல், குடியாத்தம் ஆகிய 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், வேலூா் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன என்றாா்.
முன்னதாக, ரயில்வே பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் குடியாத்தம் வட்டம், கீழ்பட்டி கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து மாவட்ட நிா்வாகம், ரயில்வே அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொள்ளவும் எம்பி கதிா்ஆனந்த் அறிவுறுத்தினாா்.
மேலும், குடியாத்தம் வட்டம், அம்மணாங்குப்பம் கிராமம் அருகிலுள்ள ரயில்வே மேல்நிலை வளைவு பாலத்தை பலப்படுத்தும் விதமாக மேல்நிலை வளைவு பாலம் 12 மீ உயரம் உள்ளவாறு அமைத்து தரப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனா்.
கூட்டத்தில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா் வி.அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், தென்னக ரயில்வே உதவி செயற்பொறியாளா் திம்மைய்யா, உதவி கோட்ட பொறியாளா் நியாசுதின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.