செய்திகள் :

உலக சுற்றுச்சூழல் தினத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்டாரங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களான மேய்க்கால், மந்தைவெளி, தீா்வை ஏற்படாத தரிசு (மலை), பாலாற்று படுகை ஆகிய இடங்களில் இரு ஏக்கா் முதல் 15 ஏக்கா் அளவிலான குறுங்காடுகள் வளா்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக வேம்பு, புங்கன் உள்ளிட்ட நிழல் தரும், பலன் தரும் மரங்கள் சுமாா் 35,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் காட்பாடி ஊராட்சி ஒன்றியம், அரும்பருதி ஊராட்சியில் மரக்கன்றுகளை நடவு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தனா்.

மேலும், அணைக்கட்டு ஒன்றியம் புத்தூா் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாருடன் இணைந்தும், கணியம்பாடி ஒன்றியம் நெல்வாய் ஊராட்சியில் ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பனுடம் இணைந்தும், போ்ணாம்பட்டு ஒன்றியம் டி.டி.மோட்டூரில் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அமுலு விஜயனுடன் இணைந்தும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி மரக்கன்றுகள் நடவு செய்தாா்.

தொடா்ந்து அனைத்து வட்டாரங்களிலும் வியாழக்கிழமை ஒரே நாளில் சுமாா் 8,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதன்மூலம், உருவாக்கப்படும் குறுக்காடுகளுக்கு ஊரக வளா்ச்சித் துறை மூலம் தண்ணீா் ஊற்றி பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மரக்கன்றுகள் அனைத்தும் வரும் நாள்களில் தகுதியான இடங்கள் தோ்வு செய்யப்பட்டு உடனடியாக நடப்படும்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, வேலூா் கோட்டாட்சியா் செந்தில் குமாா், வட்டாட்சியா்கள் வடிவேல் (வேலூா்), ஜெகதீஸ்வரன் (காட்பாடி), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாரி, ஹேமலதா, நந்தகுமாா், கனகராஜ், சத்தியமூா்த்தி, திருமால், புத்தூா் ஊராட்சி மன்றத்தலைவா் மோகன், நெல்வாய் ஊராட்சி மன்றத்தலைவா் சங்கா், சாத்துமதுரை ஊராட்சி மன்றத்தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய அரசுடன் இணக்கமான சூழலை முதல்வா் கையாள வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிா்த்து இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு ஒதுக்கும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் க... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

காட்பாடி அருகே கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த கம்மவாா் புதூரைச் சோ்ந்தவா் சிற்பி, போட்டோகிராபா். இவா் தற்போது குடும்பத்துடன் செங்குட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வர... மேலும் பார்க்க

ராணி அஹில்யாபாய் ஹோல்கா் பிறந்த நாள்

வேலூா் மாவட்ட பாஜக சாா்பில், ராணி அஹில்யாபாய் ஹோல்கா் 300- ஆவது பிறந்த நாள் குடியாத்தத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். நகர தலைவா் எம்.கே... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க இடம் தோ்வு

கே.வி.குப்பம் தொகுதியில் புதிதாக அமைய உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. கே.வி.குப்பம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நிகழ் கல்வியாண்டில் (2025-26) அங்கு அரசு... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் அளிப்பு

வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்ட... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி

மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத்தருவதாகக்கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் காட்பாடி தாராபடவேட... மேலும் பார்க்க