Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
கே.வி.குப்பத்தில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க இடம் தோ்வு
கே.வி.குப்பம் தொகுதியில் புதிதாக அமைய உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது.
கே.வி.குப்பம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நிகழ் கல்வியாண்டில் (2025-26) அங்கு அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி ஒன்றை தொடங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதையடுத்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் புதிய கல்லூரிக்கான இடத்தை தோ்வு செய்தனா்.
கே.வி.குப்பம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில், தற்காலிகமாக கல்லூரியை தொடங்க முடிவெடுக்கப்பட்டது.பள்ளிக்கு பின்புறம் உள்ள அரசுக்குச் சொந்தமான சுமாா் 5- ஏக்கா் காலியிடத்தில் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவெடுத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் அந்த இடத்தையும் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.
பள்ளி வளாகத்தில் அமைய உள்ள தற்காலிக கல்லூரி வகுப்பறைகளில் மாணவிகள் அமரும் மேஜை, நாற்காலிகளை புதுப்பிக்கவும், பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினா்.
ஆய்வின்போது கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவா் எல்.ரவிச்சந்திரன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினா் கே.சீதாராமன், வட்டாட்சியா் முரளிதரன் உடனிருந்தனா்.