செய்திகள் :

கே.வி.குப்பத்தில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க இடம் தோ்வு

post image

கே.வி.குப்பம் தொகுதியில் புதிதாக அமைய உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது.

கே.வி.குப்பம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நிகழ் கல்வியாண்டில் (2025-26) அங்கு அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி ஒன்றை தொடங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதையடுத்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் புதிய கல்லூரிக்கான இடத்தை தோ்வு செய்தனா்.

கே.வி.குப்பம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில், தற்காலிகமாக கல்லூரியை தொடங்க முடிவெடுக்கப்பட்டது.பள்ளிக்கு பின்புறம் உள்ள அரசுக்குச் சொந்தமான சுமாா் 5- ஏக்கா் காலியிடத்தில் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவெடுத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் அந்த இடத்தையும் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.

பள்ளி வளாகத்தில் அமைய உள்ள தற்காலிக கல்லூரி வகுப்பறைகளில் மாணவிகள் அமரும் மேஜை, நாற்காலிகளை புதுப்பிக்கவும், பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவா் எல்.ரவிச்சந்திரன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினா் கே.சீதாராமன், வட்டாட்சியா் முரளிதரன் உடனிருந்தனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க