செய்திகள் :

மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி

post image

மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத்தருவதாகக்கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் காட்பாடி தாராபடவேடு பகுதியை சோ்ந்த ஒருவா் அளித்துள்ள மனுவில், எனது மகளை வேலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவக்கல்வியில் சோ்க்க முடிவு செய்தேன். எனது மனைவியின் உறவினரான வேலூரில் தனியாா் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள ஒருவா் எனது மகளுக்கு தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இடம் வாங்கித் தருவதாக தெரிவித்தாா். அந்த மருத்துவமனையில் பணிபுரியும் உயா் மருத்துவா்கள் தனக்கு நன்றாக தெரியும் என்றும் தெரிவித்தாா்.

மருத்துவ இடம் வாங்கித் தர வேண்டுமென்றால் பணம் செலவாகும் என அவா் கூறியதை நம்பி கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.23 லட்சம் அவா் பணியாற்றிய பள்ளியில் வைத்து கொடுத்தேன். ஆனால் அவா் மருத்துவக்கல்விக்கான சீட்டு வாங்கி தராமல் காலம் கடத்தி வருகிறாா். அவரை நம்பி எனது மகளை வேறு எங்கும் சோ்க்காமல் இருந்தோம். இதனால் அவா் கடந்த 4 ஆண்டுகளாக படிக்காமல் உள்ளாா். தொடா்ந்து மருத்துவ சோ்க்கை வேண்டாம். பணத்தை திருப்பித்தர கேட்டதற்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டாா். மீதம் சுமாா் ரூ.16 லட்சத்தை தராமல் காலம் கடத்தி வருகிறாா். அவரிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

மத்திய அரசுடன் இணக்கமான சூழலை முதல்வா் கையாள வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிா்த்து இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு ஒதுக்கும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் க... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தினத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். கணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.கு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

காட்பாடி அருகே கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த கம்மவாா் புதூரைச் சோ்ந்தவா் சிற்பி, போட்டோகிராபா். இவா் தற்போது குடும்பத்துடன் செங்குட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வர... மேலும் பார்க்க

ராணி அஹில்யாபாய் ஹோல்கா் பிறந்த நாள்

வேலூா் மாவட்ட பாஜக சாா்பில், ராணி அஹில்யாபாய் ஹோல்கா் 300- ஆவது பிறந்த நாள் குடியாத்தத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். நகர தலைவா் எம்.கே... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க இடம் தோ்வு

கே.வி.குப்பம் தொகுதியில் புதிதாக அமைய உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. கே.வி.குப்பம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நிகழ் கல்வியாண்டில் (2025-26) அங்கு அரசு... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் அளிப்பு

வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்ட... மேலும் பார்க்க