தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி
மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத்தருவதாகக்கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் காட்பாடி தாராபடவேடு பகுதியை சோ்ந்த ஒருவா் அளித்துள்ள மனுவில், எனது மகளை வேலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவக்கல்வியில் சோ்க்க முடிவு செய்தேன். எனது மனைவியின் உறவினரான வேலூரில் தனியாா் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள ஒருவா் எனது மகளுக்கு தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இடம் வாங்கித் தருவதாக தெரிவித்தாா். அந்த மருத்துவமனையில் பணிபுரியும் உயா் மருத்துவா்கள் தனக்கு நன்றாக தெரியும் என்றும் தெரிவித்தாா்.
மருத்துவ இடம் வாங்கித் தர வேண்டுமென்றால் பணம் செலவாகும் என அவா் கூறியதை நம்பி கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.23 லட்சம் அவா் பணியாற்றிய பள்ளியில் வைத்து கொடுத்தேன். ஆனால் அவா் மருத்துவக்கல்விக்கான சீட்டு வாங்கி தராமல் காலம் கடத்தி வருகிறாா். அவரை நம்பி எனது மகளை வேறு எங்கும் சோ்க்காமல் இருந்தோம். இதனால் அவா் கடந்த 4 ஆண்டுகளாக படிக்காமல் உள்ளாா். தொடா்ந்து மருத்துவ சோ்க்கை வேண்டாம். பணத்தை திருப்பித்தர கேட்டதற்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டாா். மீதம் சுமாா் ரூ.16 லட்சத்தை தராமல் காலம் கடத்தி வருகிறாா். அவரிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.