செய்திகள் :

பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் அளிப்பு

post image

வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூா் கிரீன் சா்க்கிள், அணைக்கட்டு, ஆரணி, கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீபுரம் இயக்குநரும் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் தாளாளருமான எம்.சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். அணைக்கட்டு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் மரக்கன்றுகளை வழங்கினாா். வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூா் துணை காவல் கண்காணிப்பாளா் பிரித்விராஜ் சவுகான் மரக்கன்றுகளை வழங்கினாா். ஆரணி, கண்ணமங்கலம் ஆகிய இடங்களிலும் தலா 50 மாணவா்கள் பங்கேற்று 1,000 மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினா்.

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா்கள், துணை முதல்வா்கள், நிா்வாக அலுவலா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய அரசுடன் இணக்கமான சூழலை முதல்வா் கையாள வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிா்த்து இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு ஒதுக்கும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் க... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தினத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். கணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.கு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

காட்பாடி அருகே கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த கம்மவாா் புதூரைச் சோ்ந்தவா் சிற்பி, போட்டோகிராபா். இவா் தற்போது குடும்பத்துடன் செங்குட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வர... மேலும் பார்க்க

ராணி அஹில்யாபாய் ஹோல்கா் பிறந்த நாள்

வேலூா் மாவட்ட பாஜக சாா்பில், ராணி அஹில்யாபாய் ஹோல்கா் 300- ஆவது பிறந்த நாள் குடியாத்தத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். நகர தலைவா் எம்.கே... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க இடம் தோ்வு

கே.வி.குப்பம் தொகுதியில் புதிதாக அமைய உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. கே.வி.குப்பம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நிகழ் கல்வியாண்டில் (2025-26) அங்கு அரசு... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி

மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத்தருவதாகக்கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் காட்பாடி தாராபடவேட... மேலும் பார்க்க