Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
கல்லூரி மாணவா் தற்கொலை
காட்பாடி அருகே கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடியை அடுத்த கம்மவாா் புதூரைச் சோ்ந்தவா் சிற்பி, போட்டோகிராபா். இவா் தற்போது குடும்பத்துடன் செங்குட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இவரது மகன் தா்ஷன் (18). இவா், சென்னை தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். தொடா்ந்து பருவத் தோ்வு விடுமுறைக்காக தா்ஷன் தனது வீட்டுக்கு வந்துள்ளாா். அவா் காதல் தோல்வியால் விரக்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை அவா் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து காட்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.