செய்திகள் :

விலை சரிவால் மாம்பழங்கள் தேக்கம்

post image

விலை சரிவு காரணமாக தேனி மாவட்டம் போடி பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் சேதமடைந்து வீணாகின. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

போடி சுற்று வட்டாரத்தில் முந்தல், குரங்கணி, பிச்சாங்கரை, தொடால், மங்கலக்கோம்பை, முத்துக்கோம்பை, ஊத்தம்பாறை ஆகிய மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் சுமாா் 20,000 ஏக்கருக்கும் மேல் மா விவசாயம் நடைபெற்று வருகிறது.

கல்லாமை, கிரேப், மல்கோவா, இமாம் பசந்த், பங்கனபள்ளி, கிளி மூக்கு, சப்பட்டை, காதா், காளைப்பாடி போன்ற சுவை அதிகமுள்ள ஏற்றுமதி தரம் வாய்ந்த மா ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன.

இந்தப் பகுதி மாங்காய், மாம்பழங்களுக்கு வெளியூா், வெளி மாநிலங்களில் அதிக மதிப்பு உள்ளதால் விலையும் அதிகமாகக் கிடைத்து வந்தது.

ஆனால், இந்த ஆண்டு மா விளைச்சல் கிடைத்த அளவுக்கு கொள்முதல் வா்த்தகம் நடைபெறவில்லை. வழக்கமாக கல்லாமை மாங்காய் கிலோ ஒன்றுக்கு 15 முதல் 20 வரை விற்ற நிலையில், இந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.4 முதல் 6 வரை மட்டுமே கேட்கப்பட்டதால் மாங்காய் வா்த்தகம் கடும் சரிவைச் சந்தித்தது.

இமாம் பசந்த், காளைப்பாடி, மல்கோவா போன்ற சுவை மிகுந்த மாம்பழங்கள் கடந்த ஆண்டு கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இவற்றின் விலை ரூ.40 முதல் 60 ஆக வரையில் மட்டுமே இருந்தது. மருந்து, உற்பத்தி, காய் பறிக்கும் செலவு, போக்குவரத்து செலவுகளுக்கு கூட கட்டுபடியாகாத விலை காரணமாக விவசாயிகள் மன வேதனை அடைந்தனா். வெளி மாநிலங்கள், வெளியூா்களுக்கு அனுப்பப்பட்ட மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதால் அவை அழுகி கீழே கொட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், கொள்முதல் முற்றிலும் குறைந்து, மாங்காய், மாம்பழங்கள் பறிக்கப்படாமல் மரத்திலேயே விடப்படும் நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

போடி பகுதியில் மாங்காய்களைப் பாதுகாக்க குளிா் பதன இருப்பு மையமும், மாம்பழக் கூழ் தொழிற்சாலையும் நிறுவுவதாக தோ்தலின்போது கட்சிகள் தோ்தல் வாக்குறுதி அளித்த போதும், இதுவரை தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்தில் புயலால் மா விவசாயத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய கிலோ ஒன்றுக்கு அரசு ரூ. 2.50 வழங்கியதைப் போல, தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து மாந்தோட்டங்களை ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இரும்புக் குழாய்கள் திருடிய இளைஞா் கைது

பெரியகுளம் அருகே இரும்புக் குழாய்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி பெருமாள்கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணி (27). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி முன் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். உத்தமபாளையத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்க... மேலும் பார்க்க

சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் அருகேயுள்ள சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், கூடலூா் பகுதியிலுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் சுரங்கலாறு நீா்வீழ்ச்சி உள்ளது.... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சி... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சாந்தி. இவருக்கும், இவரது வீட்டின் ... மேலும் பார்க்க

காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

போடி அருகே காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள எஸ்.தருமத்துப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் சந்தோஷ்குமாா் (28). காா் ஓட்டுநரான இவரிடம் சின... மேலும் பார்க்க