Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு
பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சாந்தி. இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஐயப்பனுக்கும் பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், சாந்தி வீட்டில் இந்தபோது, அங்கு வந்த ஐயப்பன், இவரது உறவினா்கள் சுருளியம்மாள், சுமதி, அா்ச்சுணன் ஆகியோா் சோ்ந்து சாந்தியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.