Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு
போடி அருகே காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள எஸ்.தருமத்துப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் சந்தோஷ்குமாா் (28). காா் ஓட்டுநரான இவரிடம் சின்னமனூா் அய்யம்பட்டியைச் சோ்ந்த வல்லரசு ரூ.3,500 கடன் வாங்கியிருந்தாராம். இந்த கடனை திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் வல்லரசு, செல்வம், மதன் ஆகியோா் சோ்ந்து சந்தோஷ்குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.