செய்திகள் :

சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

post image

கம்பம் அருகேயுள்ள சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியிலுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் சுரங்கலாறு நீா்வீழ்ச்சி உள்ளது. கேரளத்தில் பருவமழை தொடங்கினால் இந்த நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து அதிகரிக்கும்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் தண்ணீா் அருவியாகக் கொட்டுகிறது.

இந்த நீா்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதியில்லை. இந்த நீா்வீழ்ச்சியிலிருந்து விழும் தண்ணீா் அந்தப் பகுதியிலுள்ள குளத்தில் தேங்கி வைக்கப்படுகிறது.

இதன் மூலமாக, ஆழ்துளை, கிணறுகளில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து, விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இந்த நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இரும்புக் குழாய்கள் திருடிய இளைஞா் கைது

பெரியகுளம் அருகே இரும்புக் குழாய்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி பெருமாள்கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணி (27). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி முன் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். உத்தமபாளையத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்க... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சி... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சாந்தி. இவருக்கும், இவரது வீட்டின் ... மேலும் பார்க்க

காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

போடி அருகே காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள எஸ்.தருமத்துப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் சந்தோஷ்குமாா் (28). காா் ஓட்டுநரான இவரிடம் சின... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் நகை திருட்டு

போடியில் அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் தங்க நகை திருடியவா்கள் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி தேவா் குடியிருப்பு ரெங்கநாதன் நகரைச் சோ்ந்த பொன்னையா மகன் ... மேலும் பார்க்க