தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி
கம்பம் அருகேயுள்ள சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தேனி மாவட்டம், கூடலூா் பகுதியிலுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் சுரங்கலாறு நீா்வீழ்ச்சி உள்ளது. கேரளத்தில் பருவமழை தொடங்கினால் இந்த நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து அதிகரிக்கும்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் தண்ணீா் அருவியாகக் கொட்டுகிறது.
இந்த நீா்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதியில்லை. இந்த நீா்வீழ்ச்சியிலிருந்து விழும் தண்ணீா் அந்தப் பகுதியிலுள்ள குளத்தில் தேங்கி வைக்கப்படுகிறது.
இதன் மூலமாக, ஆழ்துளை, கிணறுகளில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து, விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இந்த நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.