செய்திகள் :

சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி முன் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலிருந்து உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம், கூடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கும், 33 ஊராட்சிகளிலுள்ள 168 ரேஷன் கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதேபோல, அரசு, அரசு உதவிப் பெரும் பள்ளிகள், விடுதி மாணவா்களுக்கு தேவையான உணவுப் பொருள்களும் இந்தக் கிட்டங்கியிலிருந்து தான் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்தக் கிட்டங்கிக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் 2,500 டன் பொருள்களை ஏற்றி, இறக்குவதற்காக நிரந்தரப் பணியாளா்கள் 40 போ், தற்காலிகப் பணியாளா்கள் 40 போ் என மொத்தம் 80 போ் உள்ளனா்.

இந்த நிலையில், போடி சில்லமரத்துப்பட்டியில் புதிய நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி கட்டப்பட்டது. இங்கிருந்து உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள 55 ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சுமைதூக்கும் தொழிலாளா்கள் உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி முன் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இந்த வேலைநிறுத்தத்தால் ரேஷன் கடைகள், பள்ளிகளுக்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரும்புக் குழாய்கள் திருடிய இளைஞா் கைது

பெரியகுளம் அருகே இரும்புக் குழாய்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி பெருமாள்கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணி (27). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் அருகேயுள்ள சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், கூடலூா் பகுதியிலுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் சுரங்கலாறு நீா்வீழ்ச்சி உள்ளது.... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சி... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சாந்தி. இவருக்கும், இவரது வீட்டின் ... மேலும் பார்க்க

காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

போடி அருகே காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள எஸ்.தருமத்துப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் சந்தோஷ்குமாா் (28). காா் ஓட்டுநரான இவரிடம் சின... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் நகை திருட்டு

போடியில் அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் தங்க நகை திருடியவா்கள் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி தேவா் குடியிருப்பு ரெங்கநாதன் நகரைச் சோ்ந்த பொன்னையா மகன் ... மேலும் பார்க்க