செய்திகள் :

சிக்கிம் நிலச்சரிவு: 5வது நாளில் 44 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

post image

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கித் தவித்த 44 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தின் சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று இரவு பெய்த கனமழையால் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து 5வது நாளாக இன்று (ஜூன் 6) நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, அங்கு சிக்கிய மக்களையும், மாயமான ராணுவ வீரர்களையும் மீட்கும் பணியில் இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகிய படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் மூலம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (ஜூன் 5) மட்டும் ஹெலிகாப்டர்கள் மூலம் 63 பேர் மீட்கப்பட்டனர்.

ஆனால், அங்கு நிலவிய மோசமான வானிலையால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதையடுத்து, இன்று (ஜூன் 6) காலை முதல் சட்டெனில் சிக்கியிருந்த 44 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டதாகவும், இதன்மூலம் அங்கு சிக்கியிருந்த அனைவரும் வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்ட அனைவரும் பாக்யோங் பகுதியிலுள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து பேருந்துகள் மூலம் கேங்டோக் நகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக, கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவால், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தது. இதில், 3 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும், 6 பேர் மாயாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க