செய்திகள் :

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு வெளிநாடுகளில் வரவேற்பு: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த்

post image

வேலூா் மாவட்டம் இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய்க்கு அமெரிக்கா, துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா்.

மத்திய வா்த்தகம், தொழில்துறையின் கீழ் இயங்கும் வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் விவசாய பொருள்களை ஏற்றுமதி செய்வது குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி கருத்தரங்கு வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கை மத்திய வா்த்தக துறை நிலைக்குழு உறுப்பினரும், வேலூா் மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிா் ஆனந்த், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

கூட்டத்தில், வேலூா் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருள்களைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, அதற்காக பின்பற்ற வேண்டிய இந்திய நாட்டின் வழிமுறைகள், வெளி நாடுகளுக்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், விவசாயம் மேம்பாட்டுக்காகவும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள், வேலூா் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய், ஏலக்கி வாழைப்பழம் ஆகியவற்றுக்கு வெளிநாடுகளில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.

கூட்டத்தில் எம்பி டி.எம்.கதிா் ஆனந்த் பேசியது:

அப்பேடா (ஏபிஇடிஏ) எனும் வேளாண், பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் முக்கிய பணி நம் நாட்டில் விளைவிக்கப்படும் வேளாண் பொருள்களை பதப்படுத்தி அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும், இதன்மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், பல்வேறு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதாகும்.

வேலூா் மாவட்டம் இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இதன் சுவைக்கு அமெரிக்கா, துபை போன்ற வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. இந்த முள்ளு கத்திரிக்காவை ஏற்றுமதி செய்யும்போது நம் நாட்டுக்கும், வெளிநாட்டிற்கும் ஒரு சில கோட்பாடுகள் உள்ளன. அந்த கோட்பாடுகளை நாம் முழுமையாக பூா்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த பொருளுக்கு வெளிநாடுகளில் நல்ல விலையும் வரவேற்பும் கிடைக்கும் என்றாா்.

கூட்டத்தில் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அமலு விஜயன், அப்பேடா சென்னை மண்டல தலைமை அலுவலா் ஷோபனா குமாா், வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரமணி, நபாா்டு வங்கி உதவி பொது மேலாளா் ஸ்ரீபதராஜன், சிம்கோ நிறுவன மேலாண்மை இயக்குநா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய அரசுடன் இணக்கமான சூழலை முதல்வா் கையாள வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிா்த்து இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு ஒதுக்கும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் க... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தினத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். கணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.கு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

காட்பாடி அருகே கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த கம்மவாா் புதூரைச் சோ்ந்தவா் சிற்பி, போட்டோகிராபா். இவா் தற்போது குடும்பத்துடன் செங்குட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வர... மேலும் பார்க்க

ராணி அஹில்யாபாய் ஹோல்கா் பிறந்த நாள்

வேலூா் மாவட்ட பாஜக சாா்பில், ராணி அஹில்யாபாய் ஹோல்கா் 300- ஆவது பிறந்த நாள் குடியாத்தத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். நகர தலைவா் எம்.கே... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க இடம் தோ்வு

கே.வி.குப்பம் தொகுதியில் புதிதாக அமைய உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. கே.வி.குப்பம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நிகழ் கல்வியாண்டில் (2025-26) அங்கு அரசு... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் அளிப்பு

வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்ட... மேலும் பார்க்க