செய்திகள் :

ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

ஊராட்சிகளின் உதவி இயக்குநா் (திருவண்ணாமலை) வடிவேலன், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் (வளா்ச்சி) இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டில் கட்டப்படும் 3,114 வீடுகள், 2025-26 நிதியாண்டில் கட்டப்படும் 5,378 வீடுகளின் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தாா்.

இதேபோல, ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டில் 2,305 சிறிய அளவிலான பழுதுகள், 2,910 பெரிய அளவிலான பழுதுகள் என மொத்தம் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணியின் இப்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், இலங்கைத் தமிழா்களுக்கான வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் அடிஅண்ணாமலை, சமுத்திரம், அத்தியந்தல், கண்ணந்தம்பூண்டி, சொரகுளத்தூா், தென்பள்ளிப்பட்டு, கஸ்தாம்பாடி, தவசி, செங்காட்டன்குன்றில், பாப்பந்தாங்கல், ஓசூா் ஊராட்சிகள் என மொத்தம் 830 வீடுகள் கட்டும் பணியை தரமாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், அயோத்திய தாசா் பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினா் உள்ளூா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமியம்), பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், முதல்வரின் கிராமச் சாலைகள் திட்டம் ஆகிய திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த ஆட்சியா், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், 18 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்கள், அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் பயிற்றுநா்... மேலும் பார்க்க

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க