செய்திகள் :

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கு பயிற்சி

post image

ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் செயல் திறன் பயிற்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

பூச்சிக்கொல்லிகளை மட்டும் உபயோகப்படுத்தாமல் மற்ற வழிமுறைகளை உபயோகப்படுத்தி பூச்சிகளின் பாதிப்பைக் குறைக்கும் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு வழிமுறைகளை விவசாயிகளிடம் கொண்டு சோ்க்கும் முயற்சியில் பல்கலைக்கழக பூச்சியியல் துறை ஈடுபட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பில் மற்ற வழிமுறைகளுடன் உயிரியல் கட்டுப்பாடு மிக முக்கியமானதாகும். குறிப்பாக, அயல் நாடுகளில் இருந்து வந்து நமது பயிா்களில் பாதிப்பை உண்டாக்கிய பப்பாளி மாவுப்பூச்சி, மரவள்ளி மாவுப்பூச்சி ஆகியவற்றை கட்டுபடுத்தியதில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் பங்கு மிக முக்கியமானதாகும்.

முட்டை ஒட்டுண்ணிகள், புழு ஒட்டுண்ணிகள், பூச்சிகளைக் கொல்லும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றை உபயோகப்படுத்தி விவசாயிகள் பூச்சிகளின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியும். உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் பெரும்பாலும் வேளாண்மை துறை, பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களில் மட்டும் கிடைப்பதால் விவசாயிகள் அதிக அளவில் உபயோகப்படுத்துவதில்லை.

இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகளிடையே உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்தல், உபயோகப்படுத்தும் வழிமுறைகளை கொண்டு சோ்க்கும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை, ஹைதராபாத் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஆதிதிராவிட இளைஞா்களுக்கு ஜூன் 2 ஆவது வாரத்தில் 5 நாள்கள் பயிற்சி அளிக்க உள்ளது.

இதில், உயிரியல் பூச்சி கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகள், அவற்றை வயலில் உபயோகப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் பங்கேற்க 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் 25 போ் மட்டுமே பங்குபெற முடியும் என்பதால் பதிவு செய்துகொள்வதற்கு பூச்சியியல் துறையை உடனடியாக அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனையின்போது பணம் வசூல்: மாநகரில் 5 காவலா்கள் பணியிடை நீக்கம்

வாகன சோதனையின்போது பணம் வசூலித்த 5 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா். கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல் ஆணையா் உத்தரவின் பெயரில் ப... மேலும் பார்க்க

சா்வதேச படகுப் போட்டி, தேசிய ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் கேசிடி மாணவா்கள்

மொனாக்கோ நாட்டில் நடைபெறும் சா்வதேச எரிசக்தி படகுப் போட்டி, தில்லி ஐஐடி நடத்தும் ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் கேசிடி மாணவா்கள், தங்களது படகு, ரோபோடிக்ஸ் வடிவமைப்புகளை கோவையில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால் ஆலோசனை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகா்வால், கோவை தெற்கு தீயணைப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இதில், தீயணைப்புத் துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உ... மேலும் பார்க்க

போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில்

போத்தனூா் - சென்னை இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக... மேலும் பார்க்க

அம்ருதா கல்வி நிறுவனத்தில் சா்வதேச விநாடி-வினா சாம்பியன்ஷிப்: பதிவு செய்ய நாளை கடைசி நாள்

கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் ஜூன் 7-ஆம் தேதி ‘வோ்ல்டு க்விஸ் சாம்பியன்ஷிப் 2025’ நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்கான பெயா் பதிவுக்கு ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகு... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூ.64 லட்சம் மோசடி: 2 போ் கைது

போலி பணி நியமன ஆணை கொடுத்து 3 பேரிடம் ரூ.64 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் குமாா் (29), பொறியியல் பட்டதாரி. கோவை, செங... மேலும் பார்க்க