அம்ருதா கல்வி நிறுவனத்தில் சா்வதேச விநாடி-வினா சாம்பியன்ஷிப்: பதிவு செய்ய நாளை கடைசி நாள்
கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் ஜூன் 7-ஆம் தேதி ‘வோ்ல்டு க்விஸ் சாம்பியன்ஷிப் 2025’ நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்கான பெயா் பதிவுக்கு ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்ருதா கல்வி நிறுவனம் கூறியிருப்பதாவது:
‘வோ்ல்டு க்விஸ் சாம்பியன்ஷிப் 2025’ என்ற சா்வதேச விநாடி-வினா போட்டி எட்டிமடை அம்ருதா கல்வி நிறுவனத்தில் ஜூன் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. லண்டனில் உள்ள இன்டா்நேஷனல் க்விஸிங் அசோசியேஷனால் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் போட்டி, உலக அளவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படும். இந்தியாவில் இந்த ஆண்டு 10 இடங்களில் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் மட்டும் நடைபெறுகிறது.
மூன்று மணி நேரம் கொண்ட இந்தப் போட்டியில் 240 கேள்விகள் இடம்பெறும். அறிவியல், வரலாறு, கலாசாரம், நடப்பு விவகாரங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, வாழ்க்கை முறை, ஊடகம் ஆகிய துறைகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இது வயது அல்லது கல்வி அடிப்படையில் இல்லாமல் அனைவருக்கும் பொதுவானதாகும்.
இதில் பங்கேற்க விரும்புபவா்கள் இணைப்பில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 88482 14565 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.