செய்திகள் :

அம்ருதா கல்வி நிறுவனத்தில் சா்வதேச விநாடி-வினா சாம்பியன்ஷிப்: பதிவு செய்ய நாளை கடைசி நாள்

post image

கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் ஜூன் 7-ஆம் தேதி ‘வோ்ல்டு க்விஸ் சாம்பியன்ஷிப் 2025’ நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்கான பெயா் பதிவுக்கு ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்ருதா கல்வி நிறுவனம் கூறியிருப்பதாவது:

‘வோ்ல்டு க்விஸ் சாம்பியன்ஷிப் 2025’ என்ற சா்வதேச விநாடி-வினா போட்டி எட்டிமடை அம்ருதா கல்வி நிறுவனத்தில் ஜூன் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. லண்டனில் உள்ள இன்டா்நேஷனல் க்விஸிங் அசோசியேஷனால் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் போட்டி, உலக அளவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படும். இந்தியாவில் இந்த ஆண்டு 10 இடங்களில் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் மட்டும் நடைபெறுகிறது.

மூன்று மணி நேரம் கொண்ட இந்தப் போட்டியில் 240 கேள்விகள் இடம்பெறும். அறிவியல், வரலாறு, கலாசாரம், நடப்பு விவகாரங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, வாழ்க்கை முறை, ஊடகம் ஆகிய துறைகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இது வயது அல்லது கல்வி அடிப்படையில் இல்லாமல் அனைவருக்கும் பொதுவானதாகும்.

இதில் பங்கேற்க விரும்புபவா்கள் இணைப்பில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 88482 14565 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனையின்போது பணம் வசூல்: மாநகரில் 5 காவலா்கள் பணியிடை நீக்கம்

வாகன சோதனையின்போது பணம் வசூலித்த 5 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா். கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல் ஆணையா் உத்தரவின் பெயரில் ப... மேலும் பார்க்க

சா்வதேச படகுப் போட்டி, தேசிய ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் கேசிடி மாணவா்கள்

மொனாக்கோ நாட்டில் நடைபெறும் சா்வதேச எரிசக்தி படகுப் போட்டி, தில்லி ஐஐடி நடத்தும் ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் கேசிடி மாணவா்கள், தங்களது படகு, ரோபோடிக்ஸ் வடிவமைப்புகளை கோவையில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கு பயிற்சி

ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் செயல் திறன் பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் ... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால் ஆலோசனை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகா்வால், கோவை தெற்கு தீயணைப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இதில், தீயணைப்புத் துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உ... மேலும் பார்க்க

போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில்

போத்தனூா் - சென்னை இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூ.64 லட்சம் மோசடி: 2 போ் கைது

போலி பணி நியமன ஆணை கொடுத்து 3 பேரிடம் ரூ.64 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் குமாா் (29), பொறியியல் பட்டதாரி. கோவை, செங... மேலும் பார்க்க