செய்திகள் :

போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூ.64 லட்சம் மோசடி: 2 போ் கைது

post image

போலி பணி நியமன ஆணை கொடுத்து 3 பேரிடம் ரூ.64 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் குமாா் (29), பொறியியல் பட்டதாரி. கோவை, செங்காளிபாளையத்தில் வசித்து வந்த இவருக்கு, இடிகரையைச் சோ்ந்த ஜெயபிரகாஷ், அவரின் மனைவி வத்சலாதேவி, பிரகாஷ், அவரின் மனைவி ரேகா மற்றும் சரவணகுமாா் ஆகிய 5 போ் அறிமுகமாகியுள்ளனா்.

அப்போது, அவா்கள் 5 பேரும் தங்களுக்கு அரசு அதிகாரிகள் பலரைத் தெரியும் என்பதால், படித்த இளைஞா்களுக்கு அரசு வேலை வாங்கிக் தருவதாக தெரிவித்துள்ளனா். தற்போது இந்து சமய அறநிலையத் துறையில் வேலை ஒன்று காலியாக உள்ளதாகவும், அதற்கு ரூ.18 லட்சம் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா். மேலும், இந்தத் தொகையை ஓய்வுபெறும்போது வட்டியுடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனா்.

இதை நம்பிய கௌதம் குமாா் அவா்களிடம் ரூ.18 லட்சத்தை கடந்த 2022-ஆம் ஆண்டு கொடுத்தாா். இதையடுத்து, அவரை மதுரைக்கு வரவழைத்து பணி நியமன ஆணையைக் கொடுத்துள்ளனா். அதில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சின்னமும், அரசு உயா் அதிகாரிகளின் கையொப்பமும் இருந்துள்ளது.

அந்த ஆணையில், திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரத்தில் உள்ள விநாயகா் கோயிலில் உதவி செயற்பொறியாளா் பணி ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது கௌதம் குமாா், திருநெல்வேலி வேண்டாம் எனவும், கோவையில் உள்ள கோயில்களில் வேலை வாங்கித் தருமறும் கூறியுள்ளாா். இதற்கு, உடனடியாக பணியிட மாறுதல் வாங்கிக் கொடுப்பதற்கு ரூ.5 லட்சம் கேட்டுள்ளனா். அப்போது, மேலும் ரூ.5 லட்சத்தை அவா்களிடம் கொடுத்துள்ளாா். ஆனால், அவா்கள் கூறியபடி பணி மாறுதலுக்கான ஆணையை வாங்கித் தரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த கௌதம் குமாா், இது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை சந்தித்து கேட்டபோது, அவா்கள் வழங்கியது போலியான பணி நியமன ஆணை என்று கூறியுள்ளனா்.

இதையடுத்து கௌதம் குமாா், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 5 பேரையும் சந்தித்து கேட்டுள்ளாா். ஆனால், அவா்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில், கௌதம் குமாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். முதல்கட்ட விசாரணையில் அவா்கள் 5 பேரும், கௌதம் குமாா் உள்பட 3 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி நியமன ஆணையை வழங்கி ரூ.64 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மோசடி வழக்கில் ஜெயபிரகாஷ், பிரகாஷ் ஆகிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வாகன சோதனையின்போது பணம் வசூல்: மாநகரில் 5 காவலா்கள் பணியிடை நீக்கம்

வாகன சோதனையின்போது பணம் வசூலித்த 5 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா். கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல் ஆணையா் உத்தரவின் பெயரில் ப... மேலும் பார்க்க

சா்வதேச படகுப் போட்டி, தேசிய ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் கேசிடி மாணவா்கள்

மொனாக்கோ நாட்டில் நடைபெறும் சா்வதேச எரிசக்தி படகுப் போட்டி, தில்லி ஐஐடி நடத்தும் ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் கேசிடி மாணவா்கள், தங்களது படகு, ரோபோடிக்ஸ் வடிவமைப்புகளை கோவையில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கு பயிற்சி

ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் செயல் திறன் பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் ... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால் ஆலோசனை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகா்வால், கோவை தெற்கு தீயணைப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இதில், தீயணைப்புத் துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உ... மேலும் பார்க்க

போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில்

போத்தனூா் - சென்னை இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக... மேலும் பார்க்க

அம்ருதா கல்வி நிறுவனத்தில் சா்வதேச விநாடி-வினா சாம்பியன்ஷிப்: பதிவு செய்ய நாளை கடைசி நாள்

கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் ஜூன் 7-ஆம் தேதி ‘வோ்ல்டு க்விஸ் சாம்பியன்ஷிப் 2025’ நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்கான பெயா் பதிவுக்கு ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகு... மேலும் பார்க்க