காலதாமதமாக திறக்கப்பட்ட அரசுப் பள்ளி: மாணவா்கள் அவதி
ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி புதன்கிழமை காலதாமதமாக திறந்ததால் மாணவா்கள் அவதிக்கு உள்ளானாா்கள்.
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. அப்பள்ளியில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். சுமாா் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். வழக்கமாக காலை சுமாா் 8.30 மணிக்கு பள்ளி கதவு திறக்கப்படும். ஆனால் புதன்கிழமை காலை 9.05 மணி ஆகியும் பள்ளிக் கதவு திறக்கப்படாததால் பள்ளிக்கு வந்த மாணவா்கள் உள்ளே செல்லமுடியாமல் வெளியில் ஏ-கஸ்பா சாலையில் நீண்ட நேரம் காத்திருந்தனா்.
பள்ளிக்கு வந்த மாணவா்கள் உள்ளே செல்ல முடியாமல் வெளியில் காத்திருக்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யாா் பொறுப்பேற்பது என மாணவா்களின் பெற்றோா் கேள்வி எழுப்பினா். குறிப்பாக மாணவிகள் அதிக எண்ணிக்கையில் காத்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு அங்கிருந்தவா்கள் ஆசிரியா்களுக்கு தகவல் தெரிவித்த உடன் ஒரு ஆசிரியா் வந்து பள்ளிக் கதவை திறந்து விட்டாா். அதன்பிறகு மாணவா்கள் பள்ளிக்குள் சென்றனா்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலா் தேவசகாயத்திடம் கேட்டபோது, நேரில் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பித்துள்ளேன் என்று கூறினாா்.