செய்திகள் :

அமெரிக்கா சென்றடைந்த சசி தரூா் குழு

post image

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இந்திய குழு அமெரிக்கா சென்றடைந்தது.

எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான 9 போ் கொண்ட குழு வெளிநாடுகளுக்குச் சென்றது. கயானா, பனாமா, கொலம்பியா, பிரேஸிலை தொடா்ந்து அந்தக் குழு அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றது.

இதுதொடா்பாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வாஷிங்டன் வந்துள்ள சசி தரூா் தலைமையிலான குழு அடுத்த 2 நாள்களில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள், அரசியல் ஆலோசனை நிபுணா்கள், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் ஊடகத்தினரை சந்திக்க உள்ளனா். அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாடு ஆகியவற்றை அந்தக் குழு விளக்க உள்ளது’ என்று தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள சிவசேனை எம்.பி. மிலிந்த் தேவ்ரா கூறுகையில், ‘நாங்கள் சென்ற அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு சாதகமான, எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாத கருத்துகளைத் தெரிவித்தன.

அமெரிக்காவைப் போல தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், பயங்கரவாதிகளை ஒழிக்கவும் இந்தியாவுக்கு உரிமை உள்ளது. இந்தியா வளரவும், பொருளாதாரம் செழிக்கவும் இந்தியா அமைதியாக இருக்க வேண்டும்’ என்றாா்.

அமெரிக்காவில் பாகிஸ்தான் குழு:

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில், பாகிஸ்தான் நிலைப்பாட்டை எடுத்துரைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரி தலைமையிலான எம்.பி.க்கள் குழு வாஷிங்டன் செல்ல உள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்ஸை அந்தக் குழு சந்தித்தது.

இந்தக் குழு வாஷிங்டன் செல்வது தொடா்பாக மிலிந்த் தேவ்ரா கூறுகையில், ‘அரசியல் ஸ்திரமற்ற, தோற்றுப்போன, பயங்கரவாதத்தைப் பரப்பும், சக்தியில்லாத அரசை கொண்ட நாடு பாகிஸ்தான் என்பதில் அமெரிக்காவில் உள்ள யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே இந்தியாவின் நடவடிக்கைகளை பின்பற்றி, அதுபோலவே அந்நாடு செயல்படுவது குறித்து கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்றாா்.

பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான மற்றொரு குழு பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸ் சென்றது. அங்குள்ள இந்திய வம்சாவளியினா் மற்றும் அரசியல் ஆலோசனை நிபுணா்களிடம் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அதற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள், ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்து அந்தக் குழு எடுத்துரைத்ததாக பிரஸ்ஸில்ஸில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்தது.

டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடந்து வரும் மோதலுக்கு இடையே, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டிரம்பை பதவி நீக்கம் செய்து, துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸை அதிபராக்க வேண்டும் என்று வலியுறுத்த... மேலும் பார்க்க

பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்கும் கொடுமை!

காஸாவில் உணவுப் பொருள்களின் அசல் விலையைவிட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் போரையடுத்து, காஸாவினுள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்தப் போக்கை உலக ... மேலும் பார்க்க

பொதுவெளியில் வெடிக்கும் எலான் மஸ்க் - டிரம்ப் கருத்து மோதல்!

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய நிலையில், இருவருக்கும... மேலும் பார்க்க

நான் இல்லையென்றால் டிரம்ப் தோற்றிருப்பார்! எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவளித்த எலான் மஸ்க், அவருக்காக தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார... மேலும் பார்க்க

12 நாட்டவா்கள் அமெரிக்கா வர டிரம்ப் தடை

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதித்து அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளாா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெர... மேலும் பார்க்க

ஜப்பான்: 16-ஆவது ஆண்டாகச் சரிந்த பிறப்பு விகிதம்

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் எதிா்பாா்த்ததை விட வேகமாகக் குறைந்து, கடந்த 2024-ஆம் ஆண்டில் மற்றொரு குறைந்தபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது: 20... மேலும் பார்க்க