45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!
காலபைரவருக்கு முக்கனி அபிஷேகம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு வைகாசி மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி முக்கனிகளால் அபிஷேகம் நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்தில் காலபைரவருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது. வைகாசி மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு மா,பலா,வாழை ஆகிய முக்கனிகளின் வகைகள் பலவற்றில் முக்கனி அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனகளும் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து காலபைரவா் தாமரை மாலை மற்றும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.