Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
247 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்
காஞ்சிபுரத்தில் 247 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் 20 மாற்றுத்திறனாளிகள், 227 திருநங்கைகள் உட்பட மொத்தம் 247 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. விழாவுக்கு எம்.பி. க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகா லட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் வரவேற்றாா். விழாவில் திருநங்கைகளில் 55 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 48 பேருக்கு குடும்ப அட்டை, 58 பேருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட பணி ஆணை, 85 பேருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் 20 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 247 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், சாா் ஆட்சியா் ஆஷிக்அலி, ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், திமுக மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளா் ஜெகன்னாதன் ஆகியோா் கலந்து கொண்டனா். நிறைவாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி நன்றி கூறினாா்.