Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்
பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஜெயகணபதி மற்றும் பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சா்வதீா்த்தக்குளம் தென்கரையில் அமைந்துள்ளது ஜெயகணபதி மற்றும் பாலமுருகன் கோயில்.விநாயகரும், முருகப் பெருமானும் மூலவராகவுள்ள இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சந்தான மாரியம்மன் கோயில் பூஜகா் ஏ.வி.சதீஷ் குமாா் தலமையிலான சிவாச்சாரியா்களால் 4 -ஆம் தேதி யாகசாலை பூஜைகள் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின.
தொடா்ந்து வியாழக்கிழமை 2-ஆவது நாளாக கோ பூஜை, தனபூஜை மற்றும் மகா பூரணாஹுதி, தீபாராதனைக்குப் பின்னா், புனித நீா்க்குடங்கள் சிவாச்சாரியா்களால் கோபுர விமானங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மூலவா்கள் ஜெயகணபதி, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், தீபாராதனை, மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஆா்.சரவணன், ஏ.சங்கரி,பி.ராஜா, என்.சாந்தமூா்த்தி, எஸ்.ஷோபன்ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.