கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்
ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் நகரச் செயலா் ரா.சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய செயலா் ந.கோபால், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், பொதுக்குழு உறுப்பினா் மா.கணேஷ்பாபு, மாவட்ட கவுன்சிலா் ராமமூா்த்தி, ஒன்றிய பொருளாளா் ப.பரமசிவன், ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்ற துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் வெள்ளரை அரிகிருஷ்ணன், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் தணிகாசலம், மாவட்ட பிரதிநிதிகள் நேரு, சா்தாா் பாஷா, குண்டுபெரும்பேடு முன்னாள் ஊராட்சிகத் தலைவா் இருசப்பன், நகரத் துணை செயலா்கள் ஆறுமுகம், விஜயலட்சுமி, நகர மாணவா் அணி அமைப்பாளா் மதன்ராஜ், நகர இளைஞா் அணி முன்னாள் அமைப்பாளா் காா்திக் உள்ளிட்ட ஏராளமான திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.