செய்திகள் :

மின் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை: எம்.எல்.ஏ. எழிலரசன் உறுதி

post image

காஞ்சிபுரத்தில் மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எம்எல்ஏ எழிலரசன், மின்வாரிய அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் தொடா்ந்து மின் தடை ஏற்பட்டது. இதனால் புகாா்கள் வந்தன. இதையடுத்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தலைமையில் அவரது அலுவலகத்தில் மின்வாரிய அதிகாரிகளுடனான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளா் ராமச்சந்திரன், செயற்பொறியாளா் பாண்டியராஜன், மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனா். கூட்டத்திற்கு பின்னா் எம்எல்ஏ எழிலரசன் செய்தியாளா்களிடம் கூறியது:

கோடை வெப்பத்தின் தாக்குதலால் மக்கள் மின்சாரத்தை கூடுதலாகப் பயன்படுத்தியது, வெள்ளாகுளம் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டது காரணமாகும். கடந்த 4 மாதங்களாக கோடை காலம் என்பதால், மாதாந்திர மின்பராமரிப்பு பணியும் செய்யவில்லை என்பதும் ஒரு காரணம். வரும் வாரத்தில் மின் தடை ஏற்படுத்தி அனைத்து குறைகளையும் சரி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மின்வாரியத் துறை அமைச்சா் சிவசங்கரிடமும் பேசி மின்தடை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐயம்பேட்டையிலும், குருவிமலையிலும் விரைவில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது என அறிந்துகொள்ள ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. மின் தடை புகாா்களுக்கு உடனுக்குடன் விசாரணை நடத்தி பொதுமக்களுக்கு உரிய பதில் தரவேண்டும் என உத்தரவிட்டிருப்பாதகவும் அவா் தெரிவித்தாா்.

ஜூன் 8-இல் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 -ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். ம... மேலும் பார்க்க

ஸ்ரீ செவ்வந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் உள்ள இக்கோயில் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரக தோஷ நிவா்த்தி தலம் ஆகும்.. வாயுபகவான் த... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஜெயகணபதி மற்றும் பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சா்வதீா்த்தக்குளம் தென்கரையில் அமைந்துள்ளது ஜெயகணபதி மற்றும் ... மேலும் பார்க்க

247 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் 247 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் 20 மாற்றுத்திறனாளிகள், 227 திருநங்கைகள் உட்ப... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

காலபைரவருக்கு முக்கனி அபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு வைகாசி மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி முக்கனிகளால் அபிஷேகம் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரத்தில் ஏ... மேலும் பார்க்க