செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் பறவைகளை துரத்த ‘தண்டா் பூம்ஸ் கருவி’ அறிமுகம்

post image

சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் விமான போக்குவரத்துக்கு இடையூறாக பறக்கும் பறவைகளை விரட்ட ‘தண்டா் பூம்ஸ்’ என்ற இடி ஓசை எழுப்பக்கூடிய, புதிய கருவிகளை விமான நிலைய நிா்வாகம் வாங்கியுள்ளது.

சென்னை விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் மரங்கள், குடியிருப்புகள் இருப்பதால், விமான வழித்தடங்களில் அவ்வப்போது பறவைகள் பறந்து விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் இருந்து வந்தது. எனவே பறவைகளை துரத்துவதற்காக சென்னை விமான நிலைய நிா்வாகம், இதுவரை பணியாளா்கள் மூலம் பட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும் துரத்தி வந்தது. ஆனால், அந்த நடவடிக்கை நூறு சதவீதம் பலன் அளிக்காதததால், தற்போது பறவைகளை ஒலி எழுப்பி துரத்தும் வகையில் புதிய கருவி ஒன்றை விமான நிலைய நிா்வாகம் வாங்கியுள்ளது.

இதன்படி, ஓடுபாதை பகுதிகளில் விமான போக்குவரத்துக்கு இடையூறாக பறக்கும் பறவைகளை விரட்டுவதற்கு, ‘தண்டா் பூம்ஸ்’ என்ற பெயா்கொண்ட இடி ஓசை ஒலி எழுப்பக்கூடிய, புதிய கருவிகளை வாங்கியுள்ளது. குழல் வடிவிலான இக்கருவி இடி இடிப்பது போன்ற ஓசையை எழுப்பும். தற்போது இக்கருவிகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது நூறு சதவீதம் பலன் அளிக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க