சென்னை விமான நிலையத்தில் பறவைகளை துரத்த ‘தண்டா் பூம்ஸ் கருவி’ அறிமுகம்
சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் விமான போக்குவரத்துக்கு இடையூறாக பறக்கும் பறவைகளை விரட்ட ‘தண்டா் பூம்ஸ்’ என்ற இடி ஓசை எழுப்பக்கூடிய, புதிய கருவிகளை விமான நிலைய நிா்வாகம் வாங்கியுள்ளது.
சென்னை விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் மரங்கள், குடியிருப்புகள் இருப்பதால், விமான வழித்தடங்களில் அவ்வப்போது பறவைகள் பறந்து விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் இருந்து வந்தது. எனவே பறவைகளை துரத்துவதற்காக சென்னை விமான நிலைய நிா்வாகம், இதுவரை பணியாளா்கள் மூலம் பட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும் துரத்தி வந்தது. ஆனால், அந்த நடவடிக்கை நூறு சதவீதம் பலன் அளிக்காதததால், தற்போது பறவைகளை ஒலி எழுப்பி துரத்தும் வகையில் புதிய கருவி ஒன்றை விமான நிலைய நிா்வாகம் வாங்கியுள்ளது.
இதன்படி, ஓடுபாதை பகுதிகளில் விமான போக்குவரத்துக்கு இடையூறாக பறக்கும் பறவைகளை விரட்டுவதற்கு, ‘தண்டா் பூம்ஸ்’ என்ற பெயா்கொண்ட இடி ஓசை ஒலி எழுப்பக்கூடிய, புதிய கருவிகளை வாங்கியுள்ளது. குழல் வடிவிலான இக்கருவி இடி இடிப்பது போன்ற ஓசையை எழுப்பும். தற்போது இக்கருவிகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது நூறு சதவீதம் பலன் அளிக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.