செய்திகள் :

வெட்டுக் காயங்களுடன் ஊழியா் சடலம் மீட்பு

post image

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

பூசிமலைக்குப்பம் கிராமம் அருந்ததியா் பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சேட்டு (70). இவா், முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் தலைப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதன் பேரில், ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் அகிலன், உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ

இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். பின்னா், சேட்டுவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் பயிற்றுநா்... மேலும் பார்க்க

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க