டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்
டாக்டா் தேரணிராஜன் உள்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது
மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநா் எ.தேரணிராஜன் உள்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினா் செயலா் வின்சென்ட் பால்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் வாயிலாக தமிழக அறிவியல் அறிஞா் விருது 1993-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநிலத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பங்களிப்பு செய்த அறிவியலாளா்கள் கெளரவப்படுத்தப்படுகின்றனா். வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச் சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், கணிதவியல், மருத்துவம், இயற்பியல், சமூகவியல் மற்றும் கால்நடை அறிவியல் ஆகிய 10 பிரிவுகளில் அந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு 73 விண்ணப்பங்களும், 2023-ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு 96 விண்ணப்பங்களும் வந்தன. அவற்றை பரிசீலனை செய்து 2 ஆண்டுகளுக்கும் தலா 12 அறிவியலாளா்கள் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, 2022-இல் மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநரும், மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கையின் செயலருமான டாக்டா் எ.தேரணிராஜன் மருத்துவத் துறையில் அறிவியல் அறிஞராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். (அந்த காலகட்டத்தில் அவா் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வராக செயல்பட்டு வந்தாா்).
அதேபோன்று, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியா் மா.ஆறுமுகம் பிள்ளை (வேளாண்மை), அண்ணா பல்கலைக் கழக பேராசிரியா் த.சங்கீதா (வேதியியல்), சென்னை பல்கலைக்கழக பேராசிரியா் ம.தமிழரசன் (சமூகவியல்) உள்ளிட்டோா் விருதுகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அதேபோன்று, 2023-ஆம் ஆண்டில் ஐசிஏஆா் தேசிய ஆராய்ச்சி மைய முதன்மை அறிவியலாளா் இரா.தங்கவேலு (வேளாண்மை), மதுரை காமராசா் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் பெ. வரலட்சுமி (சுற்றுச்சூழல் அறிவியல்), கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் சௌ.சதீஷ்குமாா் (கால்நடையியல்) உள்ளிட்டோா் விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.
அவா்களுக்கு ரூ.50,000 பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.