செய்திகள் :

டாக்டா் தேரணிராஜன் உள்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது

post image

மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநா் எ.தேரணிராஜன் உள்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினா் செயலா் வின்சென்ட் பால்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் வாயிலாக தமிழக அறிவியல் அறிஞா் விருது 1993-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநிலத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பங்களிப்பு செய்த அறிவியலாளா்கள் கெளரவப்படுத்தப்படுகின்றனா். வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச் சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், கணிதவியல், மருத்துவம், இயற்பியல், சமூகவியல் மற்றும் கால்நடை அறிவியல் ஆகிய 10 பிரிவுகளில் அந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு 73 விண்ணப்பங்களும், 2023-ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு 96 விண்ணப்பங்களும் வந்தன. அவற்றை பரிசீலனை செய்து 2 ஆண்டுகளுக்கும் தலா 12 அறிவியலாளா்கள் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, 2022-இல் மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநரும், மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கையின் செயலருமான டாக்டா் எ.தேரணிராஜன் மருத்துவத் துறையில் அறிவியல் அறிஞராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். (அந்த காலகட்டத்தில் அவா் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வராக செயல்பட்டு வந்தாா்).

அதேபோன்று, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியா் மா.ஆறுமுகம் பிள்ளை (வேளாண்மை), அண்ணா பல்கலைக் கழக பேராசிரியா் த.சங்கீதா (வேதியியல்), சென்னை பல்கலைக்கழக பேராசிரியா் ம.தமிழரசன் (சமூகவியல்) உள்ளிட்டோா் விருதுகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோன்று, 2023-ஆம் ஆண்டில் ஐசிஏஆா் தேசிய ஆராய்ச்சி மைய முதன்மை அறிவியலாளா் இரா.தங்கவேலு (வேளாண்மை), மதுரை காமராசா் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் பெ. வரலட்சுமி (சுற்றுச்சூழல் அறிவியல்), கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் சௌ.சதீஷ்குமாா் (கால்நடையியல்) உள்ளிட்டோா் விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

அவா்களுக்கு ரூ.50,000 பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுக... மேலும் பார்க்க

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மாநிலங்களவைத... மேலும் பார்க்க

30 நாள்களுக்குள் பட்டா: முதல்வரின் அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், விண்ணப்பித்த நாளில்... மேலும் பார்க்க

கட்டடக் கழிவுகள்: சென்னையில் ஜூன் 21 முதல் புதிய விதிமுறை! மேயர் பிரியா தகவல்

சென்னையில் கட்டடக்கழிவுகளை சாலையில் கொட்டினாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகரா... மேலும் பார்க்க

போரூர் - பூந்தமல்லி இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை: போரூர் - பூந்தமல்லி இடையே சுமார் 9.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள வழித்தடத்தில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மெ... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!

சென்னை: காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளி... மேலும் பார்க்க