செய்திகள் :

கரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி: தமிழகத்தில் ஒருவர்!

post image

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் கரோனா நோய்ப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,026 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,026 ஆக அதிகரித்துள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், 512 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இருவர், தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் ஆவர்.

தமிழகத்தை பொறுத்தவரை 215 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று உயிரிழந்த 69 வயது பெண் நீரிழிவு மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் பொன்விழா காணும் இரு சமூகநலத் திட்டங்கள்!

தவெக கொடிக்கும் பகுஜன் சமாஜ் கொடிக்கும் தொடா்பில்லை: உயா்நீதிமன்றத்தில் தவெக மனு

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை என்று தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளாா். பகு... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: இபிஎஸ்-ஸுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

நமது சிறப்பு நிருபா் மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு படிவங்களில் அதிமுக பொதுச் செயலாளா் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்கும் வகையில் அனுமதிக்க... மேலும் பார்க்க

இணைநோய் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது!

இணை நோய் தாக்கத்தால் நேரிடும் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், நீடித்த ந... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வைகாசி மாதத்தின... மேலும் பார்க்க

இரட்டை இலை சின்னம்: தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உறுப்பினா்களுக்கான மாநிலங்களவவை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா: ஆக்சிஜன், மருந்துகள், செயற்கை சுவாசக் கருவிகள் போதிய இருப்பு -மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தனிமை படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டா்) மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் போதிய இருப்பை உறுதி ச... மேலும் பார்க்க