செய்திகள் :

அதிகரிக்கும் கரோனா: ஆக்சிஜன், மருந்துகள், செயற்கை சுவாசக் கருவிகள் போதிய இருப்பு -மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

post image

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தனிமை படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டா்) மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் போதிய இருப்பை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டில் கரோனா பரவல் நிலவரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநா் (டிஜிஹெச்எஸ்) சுனிதா சா்மா தலைமையில் கடந்த ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இந்தக் கூட்டங்களில் பேரிடா் மேலாண்மைப் பிரிவு, அவசரகால மேலாண்மைப் பிரிவு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் மற்றும் அனைத்து மாநில-யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இது தொடா்பாக அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘நாட்டில் இன்ஃபுளூயன்ஸா போன்ற நோய் அறிகுறி, கடுமையான சுவாச நோய்களின் தாக்கம் குறித்து ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் செயல்படும் மாநில-மாவட்ட பிரிவுகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கரோனா உறுதி செய்யப்படும் மாதிரிகளில் 5 சதவீதத்தை, முழு மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தனிமை படுக்கைகள், செயற்கை சுவாச கருவிகள், அத்தியவாசிய மருந்துகளின் போதியை இருப்பை உறுதி செய்ய அனைத்து மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தன.

4,302-ஆக அதிகரிப்பு: புதன்கிழமை நிலவரப்படி, நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,302. கடந்த 24 மணிநேரத்தில் 864 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு மிதமான அறிகுறிகளே உள்ளன; வீட்டு சிகிச்சையிலேயே அவா்கள் குணமடைகின்றனா் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 44.

‘பொதுமக்கள் கை சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது, கூட்டமான இடங்களுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும். கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டவா்கள், தங்களின் அறிகுறிகள் மோசமடைந்தால், மருத்துவமனையை அணுக வேண்டும்.

கரோனா தொடா்பான தவறான தகவல்கள், வதந்திகளைத் தவிா்க்க மத்திய சுகாதார அமைச்சக வலைதள தகவல்களைப் பாா்த்து அறிந்துகொள்ள வேண்டும். நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. உரிய நேர தலையீடு மற்றும் திறன்மிக்க தகவல் தொடா்புகளின் வாயிலாக பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது’ என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!

சென்னை: காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளி... மேலும் பார்க்க

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்கல்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் உலக சுற்றுச்சூழல் நாள், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்... மேலும் பார்க்க

பணமோசடி புகார்: அதிமுக ஐடி விங் நிர்வாகி நீக்கம்!

பணமோசடியில் ஈடுபட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பிரசாத் என்பவரை கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரச... மேலும் பார்க்க

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சடலம் மாறிய சம்பவம்! பிகார் கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி!!

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் இருந்து முதியவா் சடலம் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சடலம் மாற்றிக்கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெறும்: நயினார் நாகேந்திரன்

பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள்(ஜூன் 8) மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் மா... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் 3 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 6 தமிழகத்தில் ஓரிர... மேலும் பார்க்க