செய்திகள் :

பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெறும்: நயினார் நாகேந்திரன்

post image

பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள்(ஜூன் 8) மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதையொட்டி, அதற்கான முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்வு இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மேலும் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பார்வையிட்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன்,

"அமித்ஷா நாளை(ஜூன் 7) இரவு மதுரை வருகிறார். நாளை மறுநாள்(ஜூன் 8) மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மாலையில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மதுரையில் அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்கமாட்டார்கள்.

அமித் ஷா - அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை. சமரசம் என்ற வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், ராமதாஸ் - அன்புமணி இடையேயான சமரசப் பேச்சுவார்த்தையில் எங்களுக்கு தொடர்பு இல்லை.

குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயற்சி செய்கிறார். அவர் ஒரு நலன் விரும்பி, அவ்வளவுதான்.

பாமக எங்கள் கூட்டணியில் இணையும். தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உண்டு.

திமுகவுக்கு ஷா என்றால் பயம். அமித்ஷாதான் மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியைக் கொண்டு வந்தவர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க | நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!

மயானம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மயானத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, இறந்தவா் உடல்களை கொண்டுசெல்ல சிலா் தடுப்பதாக புகாா் எழுந்த நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க ஈரோடு மாவட்ட ஆட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: ரூ.97.95 கோடி மானியம் விடுவிப்பு

தமிழகத்தில் 37,476 அரசுப் பள்ளிகளின் பராமரிப்புக்கு 50 சதவீத மானியத் தொகை (ரூ. 97.95 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு: 2.98 லட்சம் மாணவா்கள் பதிவு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2.98 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் நிகழ் கல்வியா... மேலும் பார்க்க

விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையா்

சென்னையில் விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக... மேலும் பார்க்க

புதிய மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

புதிய தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள ப... மேலும் பார்க்க

பள்ளி மாணவி மீது தாக்குதல்: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

சென்னை ராயப்பேட்டையில் பள்ளி மாணவி தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் அதிமுக நிா்வாகி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவிக்கு, அதே பகுதியைச்சோ்... மேலும் பார்க்க